Subscribe Us

நாளைய புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி நிகழ்ச்சியில் வெடிகுண்டு புரளி கிளப்பியவருக்கு வலை.

நாளை (23) புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் மஹிந்தோதய விஞ்ஞானத் தொழிணுட்பக் கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகை தர உள்ளார்கள்.

இந்நிலையில், இந்நிகழ்வில் வெடி குண்டு ஒன்றை வெடிக்க செய்வதாக எச்சரித்து பாடசாலை மாணவர் ஒருவரின் பெயரில் போலீசாருக்கு ஆங்கிலத்தில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறிப்பிட்ட மாணவனை பிரச்சினையில் தள்ள மேற்கொள்ளபட்ட சதிவேலை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட மாணவன் பாடசாலையில் மாணவ தலைவனாக தேர்ந்தெடுக்கப் படவுள்ளதால் இது பிடிக்காத யாரோ செய்துள்ள மிக மோசமான வேலை எனவும் போலீசார் குறிப்பிட்டுள்ளதுடன், கடித்ததை எழுதிய உண்மையான நபரை தேடி போலீசார் வலை விரித்துள்ளதகவும் தெரிய வருகிறது.

http://www.lankadeepa.lk/index.php/top_story/212192

Post a Comment

0 Comments