
இருப்பினும் அவர் இந்த சூதாட்டத்தில் நேரடியாக ஈடுபட்டாரா என்பது குறிப்பிடப்படவில்லை. பொலிஸ் விசாரணைகளின் போது பந்தய தரகர் ஒருவர் இந்த தகவலை குறிப்பிட்டதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் டோணி தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்ட அறிக்கை இவ்வாறே அமைந்துள்ளது.
'கடந்த 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற இரவு விருந்தில் கிட்டி கலந்துகொண்டபோது அவரிடம் பேசிய விக்ரம் அகர்வால், 'ஒரு பெரிய டீல் ஓகே ஆகிவிட்டது. நடைபெறப்போகும் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான போட்டியில், சென்னை தோற்கும்' என்று சொல்லியுள்ளார்.
விருந்து முடிந்த பிறகு கிட்டி, குருநாத் மெய்யப்பன், விக்ரம் அகர்வால் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெய்ப்பூரில் உள்ள சஞ்சீவ் என்பருடன் குருநாத் மெய்யப்பன் தொலைபேசியில் பேசியுள்ளார். 'திட்டத்தின்படி 140 ரன்கள் மட்டும் எடுத்துவிட்டு, போட்டியிலும் தோற்றுவிடுவதாக டோணி சொல்லிவிட்டார். எனவே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று சொல்லியுள்ளார்' இந்த தகவலை பொலிஸில் சரணடைந்த பந்தய தரகர் ஹரிஷ் பஜாஜ் கூறியிருந்தார்.
இதை அடிப்படையாக வைத்து முழுமையாக டோணி சூதாட்டத்தில் ஈட்டுபட்டார் என்ற முடிவுக்கு வருவது கஷ்டம். வெறும் வாய் வார்த்தைகளாலும் ஒருவர் சொன்னார் என்ற அடிப்படையிலும் முடிவுக்கு வர இயலாது. ஆனாலும் இந்த வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை. மறைக்கப்படுகின்றது என இந்த அறிக்கையை வெளியிட்ட பொலிஸ் அதிகாரி சம்பத் குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகப்பட்டுக்கொண்டவர்கள் ஒவ்வொருவரையும் மாற்றி மாற்றி மாட்டிவிடும் செயற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பிரச்சினையும் அவ்வாறு அமைய வாய்ப்புக்கள் உள்ளன
0 Comments