Subscribe Us

மகள் சுட்ட தோசை


(ருபநாதன்)

மகள் : அப்பா அப்பா இந்தா அப்பா உனக்காக நான் சுட்ட தோசை.

அப்பா : ஆஹா ருசியா இருக்குடா செல்லக்குட்டி.

மகள்: அம்மா சுட்ட தொசையவிடவா ருசியா இருக்கு??

அப்பா : ஆமா டா தங்கம்.

மகள் : பொய் சொல்லாதப்பா. அம்மா சுடுற தோசை அழகா வட்டமா இருக்கும். நான் சுட்டது பிஞ்சு போச்சு.

அப்பா : உங்க அம்மாக்கு என் மேல பாசமே இல்ல அதான் அவ சுடுற தோசை வட்டமா இருக்கு, நான் பிச்சு பிச்சு சாப்பிடவேண்டி இருக்கு. உனக்கு என் மேல அதிக பாசம் இருக்கு அதான் நீ சுட்ட தோசைய எனக்காக பிச்சு குடுத்துருக்க. நீ சுட்ட தோசையில தான் டா குட்டி ருசி அதிகமா இருக்கு.

மகள் தவறாக செய்தால் கூட அதை ரசிபவர் தான் தந்தை. நமக்காகத் தானே இத்தனை கடினப்பட்டு செய்கிறாள் என்று உணர்ந்துகொள்வார்கள் 'மகளின் விடயத்தில் மட்டும்'

Post a Comment

0 Comments