ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 3 பில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்டு வரும் புத்தளம் மாவட்டத்தில் நரக்கள்ளி தொடக்கம்
கற்பிட்டி வரையிலான காபட் வீதியின் அபிவிருத்தி பணிகள் 98 வீதம்
நிறைவடைந்துள்ளன.
இவ்வீதியானது மிக 23-02-2014 அன்று உத்தியோகப்பூர்வமாக மக்களின்
பாவனைக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அதன் அபிவிருத்தி பணிகள் மிகவும்
மும்மரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாலாவி தொடக்கம் நரக்கள்ளி வரையிலான முதற்கட்ட புனரமைப்பு பணிகள் ஏற்கனவே
முடிவடைந்திருந்த நிலையில் இரண்டாம் கட்டமும் இறுதிக்கட்டத்திலுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments