Subscribe Us

header ads

வனாத்தமுல்லையில் பதற்றம்

கொழும்பு பேஸ்லைன் வீதியை மறித்து வனாத்தமுல்லை பிரதேசத்தைச்சேர்ந்த சிலர் வீதியில் டயர்களை போட்டு எரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வனாத்தமுல்லையைச்சேர்ந்த நபரொருவரை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்தி சென்றதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments