Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 18

1229 : புனித ரோம் பேரரசின் மன்னன் இரண்டாம் பிரெடெரிக் எகிப்திய மன்னன் அல்-கமீல் உடன் 10 ஆண்டு போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டான்.

1478:  இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்ட்டிற்கு எதிராக சதி முயற்சியில் இறங்கியதற்காக அவனது சகோதரன் ஜோர்ஜ்  தூக்கிலிடப்பட்டான்.

1797: ட்ரினிடாட் பிரித்தானியர்களிடம் வீழ்ந்தது. தலைவரானார்.

1865 :அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் ஷேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.

1911 : முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது. 23 வயது விமானயான ஹென்றி பெக்கெட் சுமார் 6500 கடிதங்களை 13 கி.மீ. தொலைவிலு;ள நைனி எனும் இடத்pல் விநியோகித்தார்.

1930 :கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.
 
1932 : சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.

 1957 :  கென்யாவின் கிளர்ச்சித்  தலைவர் டெடான் கிமாத்தி பிரித்தானிய குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.

1969: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.


1959 : நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.


1965 :  ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து காம்பியா, சுதந்திரம் பெற்றது.

1979 : தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற் தடவையாக பனி மழை பெய்தது.

1991 : லண்டனில் ரயில் நிலையங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன.

2001: இந்தோனேஷியாவில்  இன வன்முறைகள் ஆரம்பித்தன.இதனால் சுமர் 500 பேர் பலியானதுடன் ஒரு லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

2003: தென் கொரியாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி சுமார் 200 பேர்  உயிரிழந்தனர்.

 2004 : ஈரானில் இராசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று தீப்பற்றியதில் சுமார் 200 மீட்புப் பணியாளர்கள் உட்பட 295 பேர் பலியாகினர்.

2007: டில்லியில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்றுகொண்டு இருந்த 'சம்ஜவுதா அதிகவேக ரயிலில்  குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments