நேபால் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று 18 பேருடன் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மற்றும் விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நேபாளத்திலுள்ள பொகரா நகரின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமே மேலெழும்பி 15 நமிடங்களில் காணாமல் போயுள்ளது.
காணமல் போயுள்ள விமானத்தில் ஒரு குழந்தை மற்றும் டென்மார்க் பிரஜை ஒருவர் உட்பட 15 பிரயாணிகளும் 3 விமான ஊழியர்களும் இருந்ததாக நேபாள பொலிஸ் பேச்சாளர் கணேஷ் மற்றும் விமான நிறுவன பேச்சாளர் ராம் ஹரி ஷர்மா ஆகியோர் கூறியுள்ளனர்.
தற்போது விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவசர மீட்புப் பணிகளுக்கும் தயாராகுவதாகும் ஷர்மா தெரிவித்துள்ளார்.
0 Comments