நிறைய மக்கள் எவ்வாறு பழகுவது என்பதை கற்றுக்கொள்ளுவதில்லை. இந்த திறமை
இல்லையென்றால், ஒரு மனிதன் நெருங்கிய உறவினர்களுக்கிடையே உறவுகளை தொடரும்
தன்மையை இழக்கிறான். தன்னுடைய உணர்வுகளை வெளிபடுத்தும் திறமையும், பிறரை
கவனிக்கும் திறமையும் இல்லாதவர்கள், நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள
முடியாது. உங்கள் உரையாடும் திறனை வளர்ப்பதன் மூலம், உங்களுக்கும் உங்கள்
துணைக்கும் இடையே ஆன அன்பு அதிகரித்து உங்கள் உறவை பாதுகாப்பாகவும் வைக்க
முடியும்.
இன்றைய கால கட்டத்தில், மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள்,
தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்ல உறவு மற்றும் அன்பை
பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர். வெளிப்படையான, உண்மையான மற்றும்
நேர்மறையான உரையாடும் திறன் மட்டுமே ஒரு நல்ல மற்றும் சந்தோஷமான உறவு
முறையை ஏற்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும்.
தொடர்பு இன்மையால் நிறைய விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள்
ஏற்படுகின்றன. தம்பதியருக்குள் ஏற்படும் வாதங்கள், சண்டைகள் மற்றும்
முன்னும் பின்னுமாக பேசுவது போன்றவற்றை அவர்களுடைய திருப்தியான உறவு
முறையால் மட்டுமே தவிர்க்க முடியும். யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பது,
பிரச்சனையை நல்ல வழியில் மாற்றி செலுத்த உதவுகிறது.
தனிப்பட்ட வேலையால், தம்பதியர் சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட நேரம்
இல்லாமல் இருப்பதால், உங்கள் உறவு மற்றும் தொடர்பு பெரிதும்
பாதிக்கப்படுகிறது. நீங்கள் வெளியிலேயே அதிக நேரம்
செலவிடுதலால்,உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு,
உங்கள் உறவு முறை பாதிக்கப்படுகிறது. இதனால் யாராவது ஒருவர்
முதிர்ச்சியுடன் கவனமாக செயல்பட்டு இந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையை
சமாளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரம் ஒதுக்குவதன் மூலமும்,
வெளியில் அழைத்து செல்வதன் மூலமும் உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை நல்ல
வழியில் சரி செய்ய வேண்டும்.
கவனித்தல் சிறந்த உறவுமுறை நல்ல உரையாடல்களை பொறுத்தே அமையும். அதற்கு
கவனித்தல் மிகவும் முக்கியமாக விளங்குகிறது. இருவரும் சேர்ந்து பேசுவது
என்பது ஒரே நேரத்தில் நடக்காத ஒன்று, ஒருவர் பேசும் போது மற்றவர் கவனிக்க
வேண்டும். அதே போன்று ஒரே ஆளே தொடர்ந்து பேசுவதும் தப்பான உறவு முறைக்கு
வழிவகுக்கிறது. நீங்கள் உங்கள் துணையின் பேச்சிற்கும் காது கொடுத்து கேட்டு
அவர்களை நீங்கள் எந்த அளவிற்கு கவனிக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும்.
வெளிப்படையாயிருத்தல் நம்முடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை
வெளிப்படையாக உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது நம்
அனைவருக்கும் இயற்கையாக வரும் சுபாவம் அல்ல. எனினும் இந்த
பழக்கம்,எளிமையாகவும் இயற்கையாகவும் உங்களுக்கு வருவதற்கு தேவையான
முயற்சிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் கவனிப்பதை விட
பேசுவதில் கவனத்தை செலுத்த வேண்டும்.
நீங்கள் உங்கள் துணையிடம் ஒவ்வொரு நாளும் உங்கள் நாள் கழிந்த
விதத்தையும், நீங்கள் வேலை செய்த இடத்தில் நடந்த சம்பவங்களையும் பகிர்ந்து
கொள்ள வேண்டும். நேர்மை நீங்கள் உங்கள் துணையிடம், உங்கள் எண்ணங்களையும்
உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் நேர்மை இல்லா விடில், உங்கள் உறவிற்கு
எந்த மதிப்பும் இல்லை. எனவே உண்மை எவ்வளவு கசப்பாக இருப்பினும், கடினமான
விஷயமாக இருப்பினும் உண்மையை கூறுவதும், நேர்மையாய் இருத்தலும் மிகவும்
முக்கியமானது.
உறவில் ரகசியமும், பொய்யும் இல்லாமலிருந்தால், எளிமையாகவும், சிக்கல்
இல்லாமலும், குழப்பம் இல்லாமலும் உறவு விளங்கும். மேலும் கடைசியாக,
தேவையற்ற ஆச்சரியங்கள் மற்றும் விவரங்கள் போன்றவை கவனிக்கப்படாமல்
இருந்தாலும் அவை ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். கவனம் சில
நேரங்களில் சாதாரண உரையாடல்கள் தான், பயங்கர மோதல்களுக்கும்,
விவாதங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றன.
எனவே ஒவ்வொருவரும் அவர்களுடைய துணையிடம் பேசும் போதும், அவர்கள்
கூறுவதை கேட்கும் போதும் கவனத்துடன் செயல் பட வேண்டும். உங்களுடைய துணை
பேசும் போது, அவர்கள் பேசுவது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்
அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். மரியாதை மற்றும் ஒத்துழைப்பு
மரியாதைக் குறைவால் தான், பெரும்பாலான திருமணங்களில் சண்டைகளும் மோதல்களும்
ஏற்படுகின்றன. கட்டாயப்படுத்துதல் மற்றும் தொழிலில் தாழ்வு போன்றவைகளும்
சில நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன. எனவே மரியாதை கொடுத்தலும்,
வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தலும் வாழ்வின்
முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான வழியாகும்.

0 Comments