ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர் மத்திய
கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று
வெள்ளிக்கிழமை காலை 9.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை
வந்தடைந்தனர்.
ஜோர்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை
முடித்துக்கொண்டு ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட
சிறப்பு தூதுக்குழுவினர் இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இருந்து விமானம் மூலம்
நாடு திரும்பினர்.


0 Comments