ரஷ்யர்கள் சிலர் அல் குர்ஆனை எரிப்பதோடு மற்றும் சிலர் ஓர் சுரங்கப் பாதையில்
வைத்து காயப் படுத்தப் பட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவரை அவமானப்படுத்தும் காட்சிகளை
வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோ பற்றி ரஷ்யா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக யுனைடட்
பிரஸ் இன்டர்நேஷனல் (UPI) செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி 5ம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்ட மேற்படி வீடியோ, ஐந்து பேர் ரஷ்ய மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ள அல் குர்ஆன் பிரதி ஒன்றை லைட்டறினால் எரிப்பதை காட்டுகிறது.
அதன் பின் அந்த வீடியோவில் முகம் வீங்கிய நிலையில் காயப் படுத்தப் பட்டிருந்த
மத்திய ஆபிரிக்காவை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை “அல்லாஹ்வை வணங்குவதை கைவிட்டு விடுகிறேன்”
என்று கூறுமாறு வற்புறுத்தி அவரை இழிவு படுத்தும் காட்சியும் அடங்கியுள்ளது.
குறித்த தாக்குதலை மேற்கொள்ளும் காடையர்களை கண்டுபிடிக்க குற்றவியல் விசாரணை குழு
ஒன்று தயார் படுத்தப் பட்டுள்ளதாக மொஸ்கோ போலிஸ் நிலையத்தின் ஊடக பேச்சாளர் கடந்த வியாழக்கிழமை
தெரிவித்துள்ளார்.
மேற்படி வீடியோவில் குறித்த தாக்குதலை மேற்கொள்ளும் நபர்கள் பிரபல மாஸ்கோ கால்பந்து கிளப் (CSKA) வின் ரசிகர்கள் என
தம்மை அறிமுகப் படுத்துகின்றமை குறிப்பிடத் தக்கது.
0 Comments