(105).jpg)
இந்த துப்பாக்கிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த போது அவர்களுக்கு பொலிஸார் வருகிறார்கள் என்று ஏற்பட்ட அச்சம் காரணமாக அவ்வீதியில் இருந்த காட்டுப் பகுதியில் போட்டுவிட்டுப் போயிருக்கலாம் என சந்தேகிப்பதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகளுள் ஒன்று வெளிநாட்டுத் தயாரிப்பிலான துப்பாக்கி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிகளைக் கொண்டு வந்து காட்டினுள் போட்டவர்கள் யார்? எதற்காக துப்பாக்கிகளைக் கொண்டு வந்தார்கள் என்பன தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் முந்தல் பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
0 Comments