Subscribe Us

header ads

இர்பான் மொஹமட் 4 அரச தொலைக்காட்சிகள் விருது பெற்று சாதனை

(அஷ்ரப் ஏ சமத்)
வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பொருப்பாளர் இர்பான் மொஹமட் 4 அரச தொலைக்காட்சிகள் விருது பெற்று சாதனை
அரச தொலைக்காட்சி விருது இன்று (12)ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை இரவு பி.எம். ஜ.சி.எச் ல் வைத்து நடைபெற்றது. வசந்தம் தொலைக்காட்சி 5 விருதுகளும் சக்தி 1 விருதும் நேத்ரா 3 விருதுகளும்  வர்ணம் தொலைக்காட்சி 1 விருதும் கிடைக்கப் பெற்றன.

அதில்  வசந்தம் சுயாதீன தொலைக்காட்சி செய்தி பொருப்பாளர் இர்பான் மொஹமத் சிறந்த செய்தி – சிறைக்கைதிகளும் மனித நேயமும், வாரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை நடைபெறும் , 7ஆம் நாள், விளையாட்டு நிகழ்ச்சியில் லண்டன் ஒலிம்பிக் ஆய்வு,  றீகெப் – வருடத்தில் நடைபெற்ற மறு நிகழ்வுகள் ஆய்வு   மூர்த்தி தயாரித்து வழங்கும் ஓட்டோகிராப்  ஆகிய நிகழ்ச்சிகளுக்கு வசந்தம் தொலைக் காட்சிகளுக்கு அரச விருதுகள் வழங்கப்பெற்றன. 5விருதுகளைப் பெற்று இவ்வாண்டு வசந்தம் கூடுதல் விருதுகளைப் பெற்ற முதலாவது தொலைக்காட்சியாகும்.

இந் நிகழ்வில் கலாசார அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Post a Comment

0 Comments