Subscribe Us

header ads

நாடளாவிய ரீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 2392 பேர் கைது

நாட­ளா­விய ரீதியில் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி தொடக்கம் ஜன­வரி 02 ஆம் திக­தி­யான வியாழன் காலை 6 மணி வரை­யான காலப்­ப­கு­தியில் பொலிஸார் மேற்­கொண்ட சோத­னையில் குடி­போ­தையில் வாகனம் செலுத்­திய 2 ஆயி­ரத்து 392 சார­தி­களை பொலிஸார் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரு­மான அஜித் ரோஹண கேச­ரிக்குத் தெரி­வித்தார்.

அத்­துடன் ஜன­வரி மாதம் முதலாம் திகதி 6 மணி தொடக்கம் வியாழன் காலை 6 மணி வரை­யி­லான 24 மணி நேரத்­திற்குள் குடி­போ­தையில் வாகனம் செலுத்­திய 253 சார­தி­க­ளையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இதன் பிர­காரம் 10 பேருந்து வண்டி சார­தி­களும் ஆயி­ரத்து 214 மோட்டார் சைக்கிள் சார­தி­களும் 887 முச்­சக்­க­ர­வண்டி சார­தி­களும் மற்றும் ஏனைய வாகன சார­திகள் 281 பேரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இதே­வேளை ஜன­வரி முதலாம் திகதி காலை 6 மணி தொடக்கம் வியாழன் காலை 6 மணி வரை­யி­லான 24 மணி நேரங்­களில் 2 பேருந்து வண்டி சார­தி­களும் 130 மோட்டார் சைக்கிள் சார­தி­களும் ௮௫ முச்­சக்­கர வண்டி சார­தி­களும் மற்றும் ஏனைய வாகன சார­திகள் 36 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் கைது செய்­யப்­பட்ட 2 ஆயி­ரத்து 392 பேரிற்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

Post a Comment

0 Comments