Subscribe Us

header ads

பால்மா தட்­டுப்­பாட்­டிற்கு அர­சாங்­கத்தின் தீர்வு என்ன?

நாட்டில் கடந்த மூன்று வாரங்­க­ளாக பால்­மா­விற்கு பெரும் தட்­டுப்­பாடு நில­வி­வ­ரு­கின்­றது. கடந்த ஒரு­வா­ர­கா­ல­மாக தலை­நகர் கொழும்பு உட்­பட நக­ரப்­ப­கு­தி­களில் பசுப்­பா­லுக்கும் பெரும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இதனால் பாவ­னை­யா­ளர்கள் பெரும் பாடு­ப­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
 
திடீ­ரென பால்­மா­விற்கும் பசுப்­பா­லுக்கும் தட்­டுப்­பாடு ஏற்­பட காரணம் என்ன என்று அறி­யாது மக்கள் நாள்­தோறும் திண்­டா­டி­வ­ரு­கின்­றனர். எந்­த­வொரு கடை­க­ளிலோ அல்­லது பல்­பொருள் விற்­பனை நிலை­யங்­க­ளிலோ பால்­மாக்­களை பெற­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. முன்­னொ­ரு­போதும் இல்­லாத வகையில் இந்த திடீர் தட்­டுப்­பாடு தொடர்பில் அர­சாங்­கமும் உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­ய­வில்லை.
 
சந்­தையில் அங்கர், நெஸ்­பிரே, ரத்தி உட்­பட பால்மா வகைகள் முற்­றாக இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது. ஒரு­போதும் இல்­லா­த­வாறு பசுப்­பா­லிற்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. பக்­கெட்­டுக்­களில் அடைக்­கப்­பட்ட பசுப்பால் கொழும்பு உட்­பட நக­ரப்­ப­கு­தி­களில் பெற­மு­டி­யாத சூழல் உரு­வா­கி­யுள்­ளது.
 
இந்த பால்மா தட்­டுப்­பாட்­டிற்கும், பசுப்பால் தட்­டுப்­பாட்­டிற்கும் காரணம் என்ன என்­பது குறித்தோ அதனைத் தீர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்கை என்ன என்­பது தொடர்­பிலோ நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­சபை இது­வரை பகி­ரங்­க­மாக விளக்கம் எதுவும் அளிக்­க­வில்லை. இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதி­கார சபை­யிடம் வின­வி­ய­போது, உலக சந்­தையில் பால்­மாக்­களின் விலைகள் அதி­க­ரித்­துள்­ளன. இதனால் உள்­ளூ­ரிலும் பால்மா விலை­யினை அதி­க­ரிக்­கு­மாறு பால்மா நிறு­வ­னங்கள் கோரிக்கை விடுத்­துள்­ளன. ஆனால் தற்­போ­தைய நிலையில் அந்த அதி­க­ரிப்­புக்கு அனு­மதி வழங்க முடி­யாது என்று நாம் அறி­வித்­துள்ளோம். இத­னா­லேயே பால்மா நிறு­வ­னங்கள் பால்­மாக்­களை இறக்­கு­மதி செய்­வதை குறைத்­துள்­ளன. இத­னா­லேயே சந்­தையில் பால்­மாக்­க­ளுக்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. நாம் விலை அதி­க­ரிப்­பிற்கு இணங்­கி­னால்தான் பால்மா நிறு­வ­னங்கள் போதி­ய­ளவு பால்­மாக்­களை இறக்­கு­மதி செய்ய முடியும் என்று அறி­வித்­துள்­ளன. இதுவே தற்­போ­தைய பால்மா தட்­டுப்­பாட்­டிற்கு கார­ண­மாகும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
இதேபோல் பசுப்பால் தட்­டுப்­பாட்­டிற்கு அர­சாங்­கத்தின் கீழுள்ள மில்கோ நிறு­வ­னத்தின் தொழிற்­சங்­கங்கள் மேற்­கொண்­டு­வரும் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பும் ஒரு கார­ண­மாக அமைந்­துள்­ளது. கொழும்பில் மில்கோ நிறு­வன தொழிற்­சங்க ஊழி­யர்கள் கடந்த 09 ஆம் திகதி முதல் பணி­ப்­பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இவர்கள் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து இந்தப் போராட்­டத்தில் குதித்­துள்­ளனர். இந்த பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு போராட்­டத்­தினால் 200 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது என்று மில்கோ நிறு­வ­னத்தின் தலைவர் சுனில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­துள்ளார். கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் செய்­தி­யாளர் மாநா­டொன்­றினை நடத்­திய மில்கோ நிறு­வ­னத்தின் தலை­வர், தொழிற்­சங்­கங்கள் தக்க கார­ண­மின்றி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது என்று கூறி­யுள்ளார்.
 
மில்கோ நிறு­வன ஊழி­யர்கள் நிறு­வ­னத்தின் தலைவர் மற்றும் உப­த­லைவர் , பொரு­ளாளர் ஆகி­யோரை விலக்­கு­மாறு கூறியே போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். தமது கோரிக்­கைகள் தொடர்பில் பிர­தமர் டி.எம். ஜய­ரத்­தி­ன­வி­டமும் மகஜர் ஒன்றை கைய­ளித்­துள்­ளனர். தமது கோரிக்­கைகளை நிறை­வேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறி­வித்­துள்­ளனர்.
 
உட­ன­டி­யாக மில்கோ நிறு­வன ஊழி­யர்­களின் போராட்­டமும் கைவி­டப்­ப­டு­வ­தற்­கான சூழ்­நிலை காணப்­ப­ட­வில்லை. எனவே பசுப்­பா­லிற்­கான தட்­டுப்­பாடும் நீடிக்கும் என்றே எதிர்­வு­கூ­ற­வேண்­டி­யுள்­ளது. பசுப்­பா­லிற்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­மை­யினால் தலை­நகர் கொழும்­பிலும் நக­ரப்­ப­கு­தி­க­ளிலும் உள்ள ஆல­யங்­களின் தேவைக்­குக்­கூட பால் இல்­லாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்து ஆல­யங்­களில் அபி­ஷே­கங்கள் செய்­வ­தற்கும் பால் இல்­லாத நிலை­யொன்று ஏற்­பட்­டுள்­ள­தாக கவலை தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
 
இலங்­கையில் அங்கர் பால்­மாக்­களை பொன்­டேரா நிறு­வனம் உற்­பத்தி செய்து வரு­கின்­றது. நெஸ்­பிறே போன்ற பால்­மாக்­களை நெஸ்லே நிறு­வனம் உற்­பத்தி செய்து வரு­கின்­றது. தற்­போது இந்த நிறு­வ­னங்­க­ளினால் உற்­பத்தி செய்­யப்­படும் பால்­மாக்கள் பதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன. ஏனெனில் அடுத்த வருட ஆரம்­பத்தில் பால்­மாக்­களின் விலை­களை அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் அனு­மதி வழங்கும் என்ற எதிர்­பார்ப்பில் வர்த்­த­கர்கள் பால்­மாக்­களை பதுக்­கியும் வைத்­துள்­ளனர். இத­னா­லேயே பால்­மா­விற்கு பெரும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.
 
அண்­மையில் வத்­தளை உட்­பட இரு இடங்­களில் பெருந்­தொ­கையில் பதுக்கி வைக்­கப்­பட்ட அங்கர் பால்மா பக்­கெட்­டுக்கள் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன. இதேபோல் பெரு­ம­ள­வான பால்மா பக்­கெட்­டுக்கள் பதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் பொன்­டேரா நிறு­வ­னத்தின் உற்­பத்­திப்­பொ­ருட்­களில் டி.சி.டி. இர­சா­ய­னப்­ப­தார்த்தம் கலந்­துள்­ள­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்தும் பால்மா பொருட்­க­ளுக்கு தட்­டுப்­பா­டான நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. சந்­தை­யி­லி­ருந்து இந்தப் பால்மா உற்­பத்திப் பொருட்கள் அகற்­றப்­பட்­டி­ருந்­தன.
 
இந்தப் பிரச்­சி­னைக்கு பரி­சோ­த­னைகள் மூலம் தீர்வு காணப்­பட்­ட­தை­ய­டுத்து அங்கர் பால்மா உட்­பட அந்த நிறு­வ­னத்தின் உற்­பத்திப் பொருட்கள் சந்­தையில் கிடைத்­தி­ருந்­தன. ஆனால் தற்­போது சகல பால்மா வகை­க­ளுக்கும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளமை பார­தூ­ர­மான விட­ய­மாகும்.
 
மக்கள் பால்­மாக்­க­ளையும் பசுப்­பா­லையும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அலை­ய­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தப் பிரச்­சி­னைக்கு அர­சாங்­க­மா­னது தீர்­வொன்­றினை காண­வேண்டும். பால்மா உற்­பத்தி நிறு­வ­னங்கள் விலை அதி­க­ரிப்­பினை கோரி­யுள்­ளன. விலை அதி­க­ரிப்­புக்கு அனு­மதி வழங்­கப்­ப­டா­மை­யினால் பால்­மாக்­க­ளுக்கு சந்­தையில் தட்­டுப்­பாடு நில­வு­கின்­றது என்று காரணம் கூறு­வ­தற்கு நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­ச­பையோ அல்­லது அர­சாங்­கமோ தேவை­யற்­ற­தாகும்.
 
நாட்டில் பால்­மா­விற்கு தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­கின்­றது என்றால் அந்தப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் முழு முயற்­சி­யையும் எடுக்­க­வேண்டும். இத­னை­வி­டுத்து சந்­தையில் பால்மா இல்­லாத நிலையில் மக்கள் அலைந்து திரி­கையில் இந்தப் பிரச்­சி­னையைக் கண்டும் காணா­துபோல் இருப்­பது தவ­றான செயற்­பா­டாகும்.
 
சந்­தையில் பால்மா தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம் தொடர்பில் பால்மா நிறு­வ­னங்­களை அழைத்து நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்டும். அவர்­க­ளுக்­கு­ரிய பிரச்­சினை என்ன என்­பதை கண்­ட­றிந்து அதற்­கான தீர்­வு­களை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். இல்லையேல் அந்த முயற்சி பயனளிக்காவிட்டால் மாற்று நடவடிக்கைகள் மூலம் பால்மா தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகும். அத்துடன் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதன் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றை காணலாம்.
 
பால்மா தட்டுப்பாட்டை தொடர்ந்தும் நீடிக்கவிடுவது பதுக்கல் வியாபாரத்திற்கும் துணைபோவதாக அமையும். எனவே நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்தப் பால்மா பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கோருவதுடன் எதிர்காலத்தில் இத்தகைய தட்டுப்பாடு ஏற்படாதவகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

Post a Comment

0 Comments