2013 - 2014 வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரை இன்று திங்கட்கிழமை
முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலையின் மாநாயக்க தேரர் பெங்கமுவே
தம்மதின்ன தெரிவித்துள்ளார்.
பெல்மடுல்ல கல்பொத்தலாவ ரஜமகா விகாரையில் இருந்த சிவனொளிபாதமலையின் கலசம்
உட்பட பல விகாரையின் தேரரின் உபகரணங்கள் ஆகியன அட்டன் நல்லதண்ணிய
வழியாகவும் இரத்தினபுரி ஸ்ரீ பலாபத்தல வழியாகவும் ஊர்வலமாக கொண்டுச்சென்று
யாத்திரையை ஆரம்பிக்கப்படவுள்ளன.
இன்று முதல் 6 மாதங்களுக்கு தொடரும் இந்த யாத்திரையில் இலங்கையில் பல
பாகங்களிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடதக்கது.

0 Comments