Subscribe Us

header ads

99 கிலோமீட்டர் கொண்ட கொழும்பு- கண்டி அதிவேகப்பாதை முழு விபரம் இதோ!

வட கிழக்கு (கொழும்பு- கண்டி) அதிவேகப்பாதை

கருத்திட்டம்  அறிமுகம்

உத்தேச வடக்கு – கிழக்கு (கொழும்பு – கண்டி) அதிவேகப்பாதை உத்தேச வெளிச் சுற்றுவட்டப் பாதையின் நுழைவாக இருக்கின்ற மற்றும் தற்பொழுது இருக்கும் கொழும்பு – கண்டி பாதையில் (A1)  கடவத்தை நகர எல்லையில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அது கட்டுகஸ்தொட்ட – குரநாகல் - புத்தளம் பாதைக்காக (A)   ஹேதெனிய பிரதேசத்திலும் கண்டி – யாழ்ப்பாணப் பாதைக்காக (A9) கட்டுகஸ்தோட்டையிலும் பிரவேசிக்க வழியேற்படுத்துகிறது.

இந்த அதிவேகப் பாதை 99 கி.மீ. கொண்டுள்ள அதேநேரத்தில் முதற்கட்டத்தின் கீழ் கடவத்தையிலிருந்து அம்பேபுஸ்ஸவிற்கும் இரண்டாவது கட்டம் அம்பேபுஸ்ஸவிலிருந்து கட்டுகஸ்தோட்டைக்கும் அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டள்ளது.உத்தேச பாதையின் நிர்மாணத்தின் முதல் 25 கி.மீ. பகுதி வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் பிரதேசத்தின் ஊடாகச் செல்லவிருக்கிறது.

அப்பிரதேசம் 2010ஆம் ஆண்டு மே மாதம் கடுமையான வெள்ளப் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக இம்முதற் பகுதியில் தேவையான பிரதேசங்களுக்கு தூண்கள் மீது அமைக்கப்படும் பாதை முன்மொழியப்பட்டுள்ள அதேநேரத்தில் அதன் ஆரம்ப நீளம் சுமார் 9 கி.மீ. ஆகும்.
 
பிரதான துணைப்பாகம்

கட்டம் 1  -   கடவத்த - அம்பேபுஸ்ஸ

நீளம் - கி.மீ.  48.2

ஓட்டப்பாதை நிரல்கள் -  04 (இன்னும் இரண்டு ஓட்டப்பாதை நிரல்களுக்கான இடவசதியுடன்)

இடைப் பரிமாறல் நிலையங்கள் -      கடவத்தை, கம்பஹா, பலபோவ, அம்பேபுஸ்ஸ

உத்தேச ஓட்ட வேகம்  -   மணித்தியாலத்திற்கு கி.மீ. 100       
       
கட்டம் 2   -  அம்பேபுஸ்ஸ – கட்டுகஸ்தோட்டை

நீளம் -  கி.மீ. 50.7

ஓட்டப்பாதை நிரல்கள்  -  04

இடைப் பரிமாறல் நிலையங்கள் -      அம்பேபுஸ்ஸ, தேவாலகம, றம்புகன, ஹத்தரலியத்த, ஹேதெனிய, கட்டுகஸ்தோட்டை

உத்தேச ஓட்ட வேகம்  -   மணிக்கு கி.மீ. 80
 
நோக்கம்

• மாற்றுப் பாதையொன்றைத் திறப்பதனால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களில் மலைப் பிரதேசங்களையும் கைத்தொழில் பிரதேசங்களையும் திறந்துவிடல்.

• உத்தேச அதிவேகப்பாதை வலையமைப்புக்குரிய தென்னிலங்கை அதிவேகப்பாதை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் வெளிச் சுற்றுவட்டப் பாதை என்பவற்றுடன் குறித்த பிரதேசங்களை இணைப்பதன் மூலம் அம்மக்களுக்கு நாட்டில் விரைவான போக்குவரத்து வசதியைப்
பெற்றுக்கொடுத்தல்.

•பொருளாதார, கைத்தொழில்,  விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் என்பவற்றுக்குப் புதிய பிரதேசங்களைச் சேர்ப்பதன் மூலம் நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.

• ஓட்ட வேகத்தை அதிகரித்தல்.

• கொழும்பு – கண்டி பிரதான பாதையில் தற்பொழுது நிலவும் வாகன நெரிசலைக் குறைத்தல்.

புதியநிலைமை

சாத்தியக்கூற்று ஆய்வு 2001ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டதோடு உத்தேச பாதைக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1ஆம் கட்டத்திற்காக அடிப்படை அளவை வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு 2ஆம் கட்டத்தின் அடிப்படை அளவை வேலைகளும் பூர்த்தியடைந்து கொண்டிருக்கின்றன. 1ஆம் கட்டத்தின் 33 கி.மீ. ஆரம்பப் பணிகளுக்காக ஆரம்பத் திட்டம் பூர்த்திசெய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் விரிவான பொறியியலாளர் திட்டம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

1ஆம் கட்டத்திற்கான மீளக் குடியமர்த்தும் செயற்பாட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காணிச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் பிரகாரம் அளவை வேலைகள் பூர்த்தியடைந்துள்ள அதேநேரத்தில் கடவத்தையிலிருந்து செல்லும் 33 கி.மீ. பகுதிக்கான இறுதி நிர்மாணத் திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

1ஆம் கட்டத்திற்கான நீரியல் ஆய்வு பூர்த்தி செய்யப்பட்டுள்ள  அதேநேரத்தில் நிலத்தின் ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. முதல் 10 கி.மீ. இன் நில ஆய்வுப் பணிகள் ஏற்கெனவே பூர்த்தியடைந்துள்ளன.
 
கருத்திட்டத்தைச் செயற்படுத்துதல்

1ஆம் கட்டத்திற்கான தற்காலிக செலவு ரூ 70 மில்லியனாகும். 2ஆம் கட்டத்திற்கான செலவு ரூ 90 பில்லியனாகும். 1ஆம் கட்டத்தின் அல்லது அதன் ஒரு பகுதியின் ஒப்பந்த வேலைகளை ஆரம்பிப்பதற்கு வெளிநாட்டு நிதியுதவி அல்லது முதலீட்டாளர்எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கருத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகின்றவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சிலர் கவனம் செலுத்தியிருப்பதால் எதிர்காலத்தில் குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.
 
பயன்கள்

• இம்மாற்றுப் பாதை அமைக்கப்படுவதால் வடக்கு, கிழக்கு, வடமேல், மத்திய மாகாணங்களுக்கு வதிவிட மற்றும் கைத்தொழில் குடியேற்றங்கள் விரிவாக்கப்படுகின்றன.

• கைத்தொழில், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தி என்பவற்றுக்குப் புதிய பிரதேசங்கள் திறந்துவிடப்படுதல்.

• சுற்றுலாக் கைத்தொழிலும் ஏனைய முதலீடுகளிலும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அதிவேகப்பாதை அமைப்புத் திட்டமானது,ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாறும் இலங்கையின் இலட்சியத்தின் ஒரு படிக்கட்டு என்றால் அது மிகையாகாது. பாதைகளில் தினசரி அதிகரித்து வரும் வாகனநெரிசல்களை நோக்கும் போது இலங்கையில் அதிவேகப்பாதைகளின் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது.

எனவே கண்டி கொழும்பு அதிவேகப்பாதை என்று ஆரம்பமாகுமோ? என விரல்களை எண்ணும் பலருக்கு இது வரப்பிரசாதமாக அமைய வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments