உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரத்தில் பாதிக்கப்பட்டு
முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் 30
குழந்தைகள் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளன.
இவர்கள் அனைவரும் கடும் குளிர் காரணமாக இறந்துள்ளனர் என கூறப்படுகிறது.
கலவரம் பாதித்து 3 மாதங்கள்
ஆகியும் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நிவாரண முகாம்களிலேயே
தங்கியுள்ளனர். இந்நிலையில், மாநில அரசு குழந்தைகள் இறந்ததாக
வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையிலும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments