1920: சினாவின் கன்ஸு மாநிலத்தில் 8.5 றிச்சர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் சுமார் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
1946: ஐக்கிய நாடுகள் சபையில் தாய்லாந்து இணைந்தது.
1950: கொரிய யுத்தத்தில் சீனப்படைகள், வடகொரிய படையினருடன் இணைந்ததையடுத்து
அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார்.
1953: அமெரிக்க வெள்ளைமாளிகையில் முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.
1971: பங்களாதேஷ் பிரிவினை யுத்தத்தின்போது இந்தியப் படையினரும்
பங்களாதேஷின் முக்தி பாஹினி கெரில்லாக்களும் பாகிஸ்தான் படையினரை
தோற்கடித்தனர். 93,000 பாகிஸ்தான் படையினர் சரணடைவதற்கான ஒப்பந்தத்தில்
கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பொறுப்பான ஜெனரல்; ஏஏ.கே.நியாஸியும் இந்திய
இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் ஜகித் சிங் அரோராவும்
கையெழுத்திட்டனர்.
1986: சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கஸகஸ்தான் பிராந்தியத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.
1991: கஸகஸ்தான் சுதந்திர தனி நாடாகியது.


0 Comments