Subscribe Us

header ads

வரலாற்றில் இன்றுடி செம்பர் 06

1060 : முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினார்.

1240 : உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.

1768 : பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.

1790 : ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.

1865 : ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.

1884 : வாஷிங்டன் டிசி நகரில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.

1897 : வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.

1907 : அமெரிக்காவின் மேற்கு வேர்ஜீனியாவில் மொனொங்கா என்ர இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.


1917 : ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரமடைவதாக பின்லாந்து அறிவித்தது.

1957: வாங்கார்ட் ரொக்கெட் ஏவப்படுகையில், வெடித்துச் சிதறியதால் செய்மதியொன்றை  முதல்தடவையாக விண்வெளிக்கு ஏவும் நடவடிக்கை தோல்விடைந்தது.


1917 : கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டதுடன் நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.

1921 : இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

1922 : ஐரிஸ் சுதந்திர நாடு உருவானது.

1941 : இரண்டாம் உலகப் போரில் பின்லாந்துக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் போர்ப் பிரகடனம் செய்தது.


1957 : வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.


1967: அட்ரியன் கன்ட்ரோவிட்ஸ் என்பவருக்கு இதயமாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது மனித இதயமாற்று சத்திரசிகிச்சை இது.

1971 : இந்தியா பங்களாதேஷை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.

1977 : பொப்புதட்ஸ்வானா பிராந்தியத்துக்கு தென்னாபிரிக்கா சுதந்திரம் அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.

1992 : அயோத்தியில் 16ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட  பாபர் மசூதி, இந்துத்வா தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது.

1997 : ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடியிருப்புத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.

2005 : சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2005: ஈரானிய விமானப்படை விமானமொன்று தெஹ்ரான் அருகே விபத்துக்குள்ளானதால் 84 பேர் உயிரிழந்தனர்.

2006 : செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களின் மூலம்,  அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நாசா அறிவித்தது.

Post a Comment

0 Comments