Subscribe Us

டைபூன் சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஃபிலிப்பைன்ஸ் ஏழை முஸ்லிம்களின் உதவி

(A.J.M மக்தூம்)


தங்கள் வறுமை நிலையை பொறுட்படுத்தாது, அவசற மற்றும் அவசிய தேவைகளையும் மறந்து மிண்டானாவோவில் உள்ள மராவி நகரில் வசிக்கும் ஏழை முஸ்லிம்கள், பிஸியாஸ் பகுதியில் டைபூன் சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனம், மதம், தராதரம் பாராது தங்களால் முடியுமான பொருள் மற்றும் பண உதவிகளை செய்ய முன்வந்தமை மூலம் அவர்கள் சர்வதேச மட்டத்தில் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அன்மையில் ஃபிலிப்பைனின் பிஸியாஸ் பகுதியை தாக்கிய டைபூன் சூறாவளி பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது, இதனால்  3974 க்கும் அதிகமானோர் உயிரிழந்து, 1186 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இப்பேரழிவினால் தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது அவர்களின் எண்ணிக்கை 4மில்லியனையும் தாண்டி விட்டது என தெரியவருகிறது.இதனால் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அவகளுக்கு உதவிகள் வழங்குவதில் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

இந்நிலையிலேயே, மராவி நகரில் வாழும் மிகவும் வறிய முஸ்லிம்கள் இந்த உதவிகளை செய்ய முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.


Post a Comment

0 Comments