வீட்டுக்கு அருகிலுள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய மூன்று மாணவர்களில் இருவர் இடியினால் தாக்கப்பட்டு எரியுண்டதால் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் ஒருவர் கடுமையான எரிகாயங்களுடன் கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.வத்துரம்ப பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிந்தல ஹேன என்ற இடத்தை சேர்ந்த 15 வயதான அஸித ஏரங்க என்ற மாணவனே கொல்லப்பட்டவராவார்.
ஈ.வி.உபுல் தேசப்பிரிய என்ற மாணவன் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவராவார். இம்மூவரும் பாடசாலை மாணவர்களென வத்துரம்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 Comments