Subscribe Us

இலங்கைக்கு வரலாற்று முக்கியம்வாய்ந்த வெற்றி



மூன்று நாடு­க­ளுக்கு இடையில் கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் நடை­பெற்ற டயலொக் செரெண்டிப் சர்­வ­தேச கிண்ண றக்பி தொடரின் கடைசி லீக் போட்­டியில் போலந்தை மயி­ரி­ழையில் வெற்­றி­கொண்­டதன் மூலம் இலங்கை றக்பி உய­ரிய நிலையை நோக்கி நகர்­வ­தனை எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது.


இப் போட்­டியில் இலங்கை 26 : 25 என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றி­பெற்­ற­போ­திலும் அது உலக றக்­பியில் இலங்­கை­யினால் பதிவு செய்­யப்­பட்ட வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த வெற்­றி­யாக அமைந்­தது.

 ஐரோப்­பிய நாடு ஒன்­றுக்கு எதி­ராக அதுவும் உலகத் தரப்­ப­டுத்­தலில் தம்­மை­விட 15 இடங்கள் முன்­னி­லையில் இருந்த நாடு ஒன்­றுக்கு எதி­ராக இலங்­கை­யினால் ஈட்­டப்­பட்ட முத­லா­வது வெற்றி இது­வாகும்.
இந்த வெற்­றி­யா­னது டயலொக் செரெண்டிப் சர்­வ­தேச கிண்ண றக்பி தொடரில் இலங்­கைக்கு இரண்­டா­வது இடத்தைப் பெற்­றுக்­கொ­டுத்­தது.


இந்தத் தொடரில் உலகத் தரப்­ப­டுத்­தலில் 44ஆவது இடத்­துடன் கள­மி­றங்­கிய மட­கஸ்கார் தனது இரண்டு போட்­டி­க­ளிலும் இலங்­கை­யையும் (17 : 12), போலந்­தையும் (25 : 21) வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னா­னது.


போலந்­துக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான போட்டி கடந்த வெள்­ளி­யன்று மின்­னொ­ளியில் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர் இடி­யு­டன்­ கூ­டிய கடும் மழை பெய்­தது. எனினும் போட்டி ஆரம்­பித்­த­வுடன் இயற்கை அன்னை அமைதி அடைய போட்டி விறு­வி­றுப்­பாக இடம்­பெற்­றது.


போட்­டியின் ஒரு கட்­டத்தில் போலந்து 15 : 3 என முன்­னிலை வகித்­தது.
எனினும் ரீஸா முபாரக் தனது இரண்­டா­வது பெனல்­டியை இலக்கு தவ­றாமல் உதைத்­ததைத் தொடர்ந்து 34ஆவது நிமி­டத்தில் நிரோஷன் பெர்­னாண்டோ மிகவும் அலா­தி­யாக ட்ரை வைத்தார். இந்த ட்ரைக்­கான மேல­திகப் புள்­ளி­களை ரீசா பெற்­றுக்­கொ­டுத்தார்.


இடை­வேளை நெருங்கிக் கொண்­டி­ருந்­த­போது ரீஸா பெனால்டி ஒன்றை தவ­ற­விட்டார். இடை­வே­ளையின் பின்னர் 50ஆவது நிமி­டத்தில் போலந்து அணி பெனல்டி ஒன்­றின்­மூலம் 18 : 15 என முன்­னிலை அடைந்­தது. ஆனால் அடுத்த இரண்­டா­வது நிமி­டத்தில் போலந்து வீரர் ஒருவர் விதி­க­ளுக்கு முர­ணான வகையில் விளை­யா­டி­யதால் இலங்­கைக்கு பெனல்டி வழங்­கப்­பட்­ட­துடன் அந்த வீர­ருக்கு மத்­தி­யஸ்தர் மஞ்சள் அட்­டையைக் காட்டி ஆடு­க­ளத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றினார்.


இதனை நன்கு சாத­க­மாக்­கிக்­கொண்டு விளை­யா­டிய இலங்கை அணி மீண்டும் நிரோஷன் பெர்­னாண்டோ மூலம் ட்ரை ஒன்றை வைத்­தது. அதற்­கான மேல­திகப் புள்­ளி­களைப்பெற்­றுக்­கொ­டுத்த ரீஸா முபாரக், 68ஆவது நிமி­டத்தில் ட்ரொப் கோல் ஒன்றைப் போட்டு இலங்­கையை 26 : 18 என முன்­னி­லையில் இட்டார்.


ஆட்டம் முடி­வ­டைய ஓரிரு நிமி­டங்கள் இருந்­த­போது ஒரு கோல் மூலம் போலந்து புள்­ளி­களைப் பெற்­ற­போ­திலும் சற்று நேரத்தில் ஆட்டம் முடிவடைய நாமல் ராஜபக் ஷவின் தலைமையிலான இலங்கை அணியினர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.


இந்தத் தொடரில் 28 புள்ளிகளை ஈட்டிக்கொடுத்த ரீஸா முபாரக் அதிக புள்ளிகளைப் பெற்ற வீரருக்கான விருதை வென்றெடுத்தார்.

Post a Comment

0 Comments