Subscribe Us

header ads

துபாய் ராஷித் மருத்துவமனையில் உயிரிழந்த இந்த சகோதரரின் உறவினர்களை தேடி..


அஸ்ஸலாமு அலைக்கும் ...

துபாயில் பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ் ( வயது 30 ). உடல்
நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் துபாய் (DUBAI) ராஷித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இறந்து விட்டார்.

எனினும் இவரது உடலைக் கேட்டு எவரும் இதுவரை வரவில்லை என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிந்த துபாய் (DUBAI) ஈமான் அமைப்பினர் சேகர் தங்கராஜ் குறித்த விபரங்களை அறிந்து அவரது உறவினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தில் காணும் சேகர் தங்கராஜ் குறித்த தகவல் தெரிந்தவர்கள் துபாய் (DUBAI)  ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர்  திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா 050 467 43 99 மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் 050 51 96 433 ஆகிய எண்களிலோ அல்லது info@imandubai.com  எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவித்து உதவலாம்.

ஜசக்கால்லாஹ் ஹைரன்.

*-தகவல் : Razana Manaf -*

Post a Comment

0 Comments