Subscribe Us

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அமைச்சர் ராஜித கேட்கும் கேள்வி பதில் சொல்லுங்க மேடம்.

வடக்கில் தமிழ் மக்­களின் மனித உரிமை குறித்து குரல் எழுப்பும் ஜெய­ல­லிதா 33 வரு­டங்­களின் பின்னர் யுத்தம் முடி­வ­டைந்து தமிழ் மக்கள் தமது வாழ்க்­கையை கட்­டி­யெ­ழுப்ப முயற்­சிக்­கையில் அந்த மக்­க­ளுக்­கான மீன் வளத்தை தமி­ழக மீன­வர்­களை கொண்டு கொள்­ளைய­டிப்­பது நியா­ய­மா­னதா? என்று மீன்­பிடி மற்றும் நீரி­யல்­வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனா­ரட்ன கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

இது தமது சகோ­தர மக்­க­ளுக்­காக தமி­ழக முதல்வர் வழங்கும் பரிசா என்று கேள்­வி­யெ­ழுப்­பு­கின்றோம் எனவும் அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
இலங்கை மீன­வர்கள் தமி­ழக கடல் பகு­திக்குள் அத்து மீறி பிர­வே­சிப்­ப­தனால் அங்கு கைது செய்­யப்­ப­டு­வ­தாக தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா ஜெயராம் தெரி­வித்­துள்ளார். அப்­ப­டி­யாயின் தமி­ழக மீன­வர்கள் எமது கடல் எல்­லைக்குள் அத்­து­மீறி பிர­வே­சிக்­கும்­போது அவர்­களை எமது கடற்­ப­டை­யினர் கைது செய்­வது எவ்­வாறு அநீ­தி­யாகும் என்று தமி­ழக முதல்­வ­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்றோம்.

இந்­திய மீன­வர்கள் 80 பேரும் 47 பட­கு­களும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளதால் மீனவ குடும்­பங்கள் பொரு­ளா­தார ரீதியில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் இலங்கை மீன­வர்கள் 154 பேரும் 29 பட­கு­களும் தமி­ழ­கத்தில் தடுத்து வைக்­ப­பட்­டுள்­ளதன் கார­ண­மாக எமது மீன­வர்­க­ளுடம் அவர்­க­ளது குடும்­பங்­களும் பாதிக்­கப்­ப­டு­கின்­றமை தமி­ழக முதல்­வ­ருக்கு மறந்­து­போ­யுள்­ளமை கேள்­விக்­கு­றி­யாகும்.

தமி­ழக மீன­வர்கள் தொடர்பில் முத­ல­மைச்­ச­ருக்கு கவலை இருப்­ப­தைப்­போன்று எமது மீன­வர்கள் குறித்து எமக்கும் கவலை இரு­க்­கின்­றது என்­ப­தனை கூற­வேண்டும். உலக மீனவர் தினத்­திலும் தமி­ழக மீன­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக முதல்வர் கூறு­கின்றார். ஆனால், உலக மீனவர் தினத்­தன்று எமது மீன­வர்­களும் தமி­ழ­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

தமி­ழக முத­ல­மைச்­சரின் அழுத்தம் கார­ண­மாக தமி­ழ­கத்தில் உள்ள எமது மீன­வர்­க­ளுக்கு உண­வு­கூட வழங்­கப்­ப­டு­வ­தில்லை. எமது தூத­ரக அதி­கா­ரிகள் கூட மீன­வர்­களை பார்ப்­ப­தற்கு செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. இதனால் தமி­ழ­கத்தில் உள்ள எமது மீன­வர்­களின் உணவுத் தேவை­க­ளுக்­காக மீனவ திணைக்­க­ளத்­தி­லி­ருந்து நிதி இந்­திய தூத­­ரகத்­துக்கு அனுப்­பப்­பட்­டது.

ஆனால் இலங்­கையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமி­ழக மீன­வர்­க­ளுக்கு உணவுத் தேவை உள்­ளிட்ட சகல வச­தி­களும் செய்­து­கொ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இந்­திய தூத­ரக அதி­கா­ரி­களும் அவர்­களை சென்று பார்ப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் மிக அதி­க­ள­வான மீன­வர்கள் விடு­விக்­கப்­பட்­டு­விட்­டனர். அந்­த­வ­கையில் தமி­ழ­கத்தில் உள்ள எமது மீன­வர்­க­ளுக்கு மனி­தா­பி­மான தேவையைக் கூட நிறை­வேற்ற தமி­ழக முத­ல­மைச்சர் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

இந்­நி­லையில், வடக்கில் தமிழ் மக்­களின் மனித உரிமை குறித்து குரல் எழுப்பும் ஜெயலலிதா 33 வருடங்களின் பின்னர் யுத்தம் முடிவடைந்து தமிழ் மக்கள் தமது வாழ்க்கையை கட்டியெழுப்ப முயற்சிகளை முன்னெடுக்கும்போது அந்த மக்களுக்கான மீன் வளத்தை தமிழக மீனவர்களை கொண்டு கொள்ளையடிப்பது நியாயமானதா? இது தமது சகோதர மக்களுக்காக தமிழக முதல்வர் வழங்கும் பரிசா என்று கேள்வியெழுப்புகின்றோம்.

Post a Comment

0 Comments