Subscribe Us

தொலைத் தொடர்பு கோபுர உச்சியில் ஏறி பிரதேச சபை உத்தியோகத்தர் ஆர்ப்பாட்டம்

அம்பாறை தமண பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் எரிபொருளையும் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரி ஹிங்குராணை பிரதேச தனியார் தொலைத் தொடர்பு கோபுரத்தின் உச்சியில் ஏறி போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை  காலையிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டார் என தமண பொலிஸார் தெரிவித்தனர்.

தமண பிரதேச சபையின் வருமான வரி உதிதியோகத்தராக கடமையாற்றும் 45 வயதான ஆர்.டீ.டீ.சேமசிறி என்பவர் தனக்கு வருமானவரி அறவீடு செய்வதற்கு மோட்டார் சைக்கிளுக்கு வழங்கும் எரிபொருளின் பணத்தை  3 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்தும் தனது சம்பளத்தை அதிகரித்தும் தருமாறு கோரிக்கை விடுத்து இன்று காலை 7.00 மணிக்கு ஹிங்குராணை பிரதேசத்தில் அமைந்திருக்கும் தனியார் தொலைத் தொடர்பு கோபுரத்தின் உச்சியில் ஏறி இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர் (Metro)





அம்பாறை தமண பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் எரிபொருளையும் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரி ஹிங்குராணை பிரதேச தனியார் தொலைத் தொடர்பு கோபுரத்தின் உச்சியில் ஏறி போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை  காலையிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டார் என தமண பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://metronews.lk/article.php?category=news&news=2697#sthash.zheRCy4q.dpuf

Post a Comment

0 Comments