
தமிழக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா மாற்றியமைத்துள்ளார். அமைச்சர் கே.சி.வீரமணியிடம் இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை தற்போது விஜயபாஸ்கரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.சி.வீரமணிக்கு பள்ளி கல்வி,விளையாட்டு, இளைஞர் நலத்துறையை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கர் நாளை மறு நாள் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments