Subscribe Us

சச்சின் எனக்காக 62 நாட்கள் தேநீர் தயாரித்தார்; நரேந்திர ஹிர்வானி நினைவு கூருகிறார்

இந்­திய கிரிக்கெட் அணியின் துடுப்­பாட்ட மேதை­யான சச்சின் டெண்­டுல்கர் அடுத்த மாதத்­துடன் டெஸ்ட் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்­வு­  பெ­ற­வுள்ளார். 

நவம்பர் 14 முதல் 18 ஆம் திக­தி­வரை மும்­பையில் நடை­பெ­ற­வுள்ள மேற்­கிந்­திய அணி­யு­ட­னான இரண்­டா­வது டெஸ்ட் போட்டி சச்­சினின் கடைசி டெஸ்ட் போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது.

 1989 ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்டி மூலம் டெஸ்ட் உல­குக்கு அறி­மு­க­மா­னவர் சச்சின் டெண்­டுல்கர். அதன்பின் கடந்த 24 ஆண்­டு­களில் ஏரா­ள­மான சாத­னை­களை அவர் படைத்தார்.

 தற்­போது 198 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டிய சச்சின் 200 ஆவது டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டு­வதும் ஏனைய வீரர்­களால் கற்­பனை செய்­வ­து­கூட கடி­ன­மான ஒரு சாத­னை­யாக நீண்­ட­காலம் நிலைத்­தி­ருக்கும்.

சச்சின் போன்று விளங்க வேண்டும் என்­பது சிறு­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, அவரின் சம­கா­லத்து வீரர்கள்  பல­ருக்கு­கூட ஒரு கன­வாகும். பல்­வேறு சாத­னை­களைப் படைத்த சச்சின் நடுத்­தரக் குடும்­பத்தில் பிறந்து வளர்ந்­தவர். 

கிரிக்கெட் உலகில் ஏனைய இளம் வீரர்கள் எதிர்­கொண்ட பல்­வேறு அனு­ப­வங்­களை சச்­சினும் எதிர்­கொண்டார். சாதா­ரண வீரர்­களைப் போன்றே அவர் ஏனை­யோரால் நடத்­தப்­பட்டார். அவர் எதிர்­கா­லத்தில் கிரிக்கெட் உலகின் கட­வு­ளாக மதிக்­கப்­ப­டுவார் என்­றெல்லாம் அப்­போது யாரும் எதிர்­பார்­தி­ருக்க முடி­யுமா என்ன?

இந்த வகையில், சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்­கையின் ஆரம்­ப­ கா­லத்தில் தனக்கு 62 நாட்கள் தேநீர் தயா­ரித்­துக்­கொ­டுத்தார் என இந்­திய அணியின் முன்னாள் சுழற்­பந்­து­வீச்­சா­ள­ரான நரேந்­திர ஹிர்­வானி  தெரி­வித்­துள்ளார்.

ஆம் ஆண்டு மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியில் அறி­மு­க­மான நரேந்­திர ஹிர்­வானி, அப்­போட்­டியில் 16 விக்­கெட்­டு­களைக் கைப்­பற்றி புகழ்­பெற்­றவர். (ஆனால் அதன்பின் 1996 ஆம் ஆண்­டு­வரை அவர் விளை­யா­டிய ஏனைய 16 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் மேலும் 50 விக்­கெட்­டு­க­ளையே கைப்­பற்­றினார்.) 
1988

 சச்­சினின் கிரிக்கெட் வாழ்க்­கையின் ஆரம்பக் காலத்தில் அறை சகா­வாக விளங்­கி­ய வர்­களில் ஒருவர் இவர். நியூஸிலாந்து சுற்­று­லா­வொன்­றுக்கு சச்­சினும் நரேந்­திர ஹிர்­வா­னியும் தெரி­வு­செய்­யப்­பட்­ட­போது இரு­வரின் நட்பு ஆரம்­ப­மா­கி­யது. 

ஆனால், 1987 ஆம் ஆண்டு 15 வய­துக்­குட்­பட்ட இந்­திய அணி வீரர்­க­ளுக்­கான பயிற்சி முகா­மின்­போது தான் முதல் தட­வை­யாக சச்­சினை சந்­தித்­தாக தற்­போது 45 வய­தான ஹிர்­வானி கூறு­கிறார்.

நான் 19 வய­துக்­குட்­பட்­டோ­ருக்­கான இந்­திய அணியின் அவுஸ்­தி­ரே­லிய சுற்­று­லாவின் பின்னர் தாயகம் திரும்­பி­யிருந்தேன். 15 வய­துக்­குட்­பட்ட இந்­திய அணியின் அப்­போதைய பயிற்­றுநர் வாசு பிரான்ஜிப் எப்­போதும் அந்த சிறிய பையன் (சச்சின்) குறித்து உயர்­வாகப் பேசிக்­கொண்­டி­ருந்தார்.

 சச்சின் குறித்து கேள்­விப்­பட்­டதும் வலைப்­ப­யிற்­சி­யின்­போது அவ­ருக்கு பந்­து­வீசச் சென்றேன். அக்­கா­லத்­தி­லேயே அவ­ருக்கு பந்­து­ வீ­சு­வது கடி­ன­மா­ன­தாக இருந்­ததுஎன நினைவு கூர்­கிறார் நரேந்­திர ஹிர்­வானி.

பின்னர் கிரிக்கெட் சுற்­று­லாவில் 72 நாட்கள் சச்சின் எனது அறை சகா­வாக இருந்­தார். அவர் தன்னை தயார் ­ப­டுத்­திக்­கொள்ளும் விதம் ஏனை­ய­வர்­க­ளை­விட முற்­றிலும் வித்­தி­யா­ச­மாக இருந்­தது. கிரிக்கெட்  தவிர வேறு எது குறித்தும் அவர் சிந்­திக்க மாட்டார். 

இப்­போதும் அப்­ப­டித்தான். அவர் சாப்­பி­டு­வது, குடிப்­பது, சுவா­சிப்­பது எல்­லாமே  அவர் எப்­போதும் கிரிக்­கெட்தான். இவர் ஒன்றில் நிழல் பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருப்பார். 

அல்­லது  களத்தில் எவ்­வாறு சிறப்­பாக செயற்­ப­டலாம் என ஆராய்ந்­து­கொண்­டி­ருப்பார். அத­னால் தான் அவர் இன் னும் உய­ர்ந்த நிலை யில் இருக்­ கிறார் போ லும்எனவும் ஹிர்­வானி கூறி­யுள்ளார். 

சச்­சினை விட ஒரு வரு­டத்­துக்கு முன்­பா­கவே சர்­வ­தேச போட்­டி­களில் அறி­மு­க­மா­னதால் ஹிர்­வா­னியை சிரேஷ்ட வீர­ராக மதித்தார் சச்சின். இதனால் கனிஷ்ட வீரர் என்ற அடிப்­ப­டையில் ஹிர்­வா­னிக்கு சச்சின் தேநீர் தயாரித்துக் ­கொ­டுக்க வேண்­டி­யிருந்­ததாம் 72 நாட்கள் சுற்­று­லாவில் 62 நாட்கள் அவர் எனக்குத் தேநீர் தயா­ரித்­துக்­கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது. அதற்­காக நான் கட­மைப்­பட்­டுள்ளேன். 

பின்னர் இது குறித்து அவ­ருடன் பேசும்­போது உங்­க­ளுக்கு 70 வரு­டங்­களுக்கு தேநீர் தயா­ரித்துக் கொடுப்பேன்  என நான் கூறி­யுள்ளேன்என அந்த ஆச்­ச­ரிய அனு­ப­வத்தை நினை­வு­கூர்ந்­துள்ளார் நரேந்­திர ஹிர்­வானி. 

இளம் வயதில் வாகனம் செலுத்­து­வ­தற்கு மிகுந்த ஆசை­கொண்­டி­ருந்­தா­கவும் ஹிர்­வானி கூறு­கிறார். அப்­போது அவர் வெள்ளை மாருதி 800 காரொன்றை வைத்­தி­ருந்தார். நான் அவரின் வீட்­டுக்குச் சென்று அவரின் பெற்றோர், சகோ­த­ரர்­க­ளுடன் உரை­யாடிக் கொண்­டி­ருக்­கும்­போது சச்சின் அடிக்­கடி குறுக்­கிட்டு, “நீங்கள் எப்­படி வீட்­டுக்குச் செல்­வீர்கள்?” எனக் கேட்பார். 

அப்­போது சச்­சினை வாகனம் செலுத்த வீட்டார் அனு­ம­திக்க மாட்­டார்கள். அதனால் வாகனம் செலுத்தும் வாய்ப்பை பெறு­வ­தற்கு அவர் முயற்­சித்­துக்­கொண்­டி­ருந்தார். இறு­தியில் என்னை காரில் ஏற்­றிச்­சென்று விடு­வ­தற்கு அவர் அவர் பெற்­றோரை சம்­ம­திக்க வைப்பார்என ஹிர்­வானி கூறி­யுள்ளார்.

சச்சின்  அணித்­த­லை­மையின் கீழும் ஹிர்­வானி விளை­யா­டி­யுள்ளார். ஆனால், தலைவர் பத­வியில் சச்­சி­னுக்கு அதிஷ்­ட­மி­ருக்­க­வில்லை என ஹிர்­வானி கூறு­கிறார்.

அவர் சிறந்த அணித்­த­லை­வ­ராக விளங்­கி­யி­ருக்­கக்­கூடும். சிறந்த கிரிக்கெட் மூளை கொண்­டவர் அவர்.
ஒரு வீர­ராக அணியில் தனது இடத்தை இழக்க நேரிடும் என அவர் ஒரு­போதும் அஞ்­சி­ய­தில்லை. ஆனால், அணித் தலைவர் பதவி குறித்து நிச்­ச­ய­மின்மை காணப்­பட்­டதுஎன ஹிர்­வானி தெரி­வித்­துள்ளார்.

2008 ஆம் ஆண்டில் சச்சின் மிகச்­ சி­றந்த நிலையில் இருந்­த­போது இந்­தி­யாவின் தேசிய கிரிக்கெட் தேர்­வா­ள­ராக நரேந்­திர ஹிர்­வானி நிய­மிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

நான் தேசிய கிரிக்கெட் தேர்வாளராக நியமிக்கப்பட்டபின் முதல் தடவை யாக சச்சினை சந்தித்தபோது அவர் என்னை வித்தியாசமான ஒரு பார்வை பார்த்தார். உடனே நாம் இருவரும் வெடிச்சிரிப்பு சிரித்தோம்.  நான் பயிற்றுநராக இருந்தகாலத்தில் சச்சின் நம்பமுடியாதளவு சிறப்பாக விளையாடினார்.  

தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்னை சச்சின் சிறப்பாக எதிர்கொண்டார். அந்தப் போட்டியின் பின்னர் நீங்கள் நல்ல மனிதரா நல்ல வீரரா என்பதில் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது என வேடிக்கையாகக் கூறினேன்'' என நரேந்திர ஹிர்வானி தெரிவித்துள்ளார்.




 

இந்­திய கிரிக்கெட் அணியின் துடுப்­பாட்ட மேதை­யான சச்சின் டெண்­டுல்கர் அடுத்த மாதத்­துடன் டெஸ்ட் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்­வு­  பெ­ற­வுள்ளார்.

நவம்பர் 14 முதல் 18 ஆம் திக­தி­வரை மும்­பையில் நடை­பெ­ற­வுள்ள மேற்­கிந்­திய அணி­யு­ட­னான இரண்­டா­வது டெஸ்ட் போட்டி சச்­சினின் கடைசி டெஸ்ட் போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது.

 1989 ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்டி மூலம் டெஸ்ட் உல­குக்கு அறி­மு­க­மா­னவர் சச்சின் டெண்­டுல்கர். அதன்பின் கடந்த 24 ஆண்­டு­களில் ஏரா­ள­மான சாத­னை­களை அவர் படைத்தார்.

 தற்­போது 198 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டிய சச்சின் 200 ஆவது டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டு­வதும் ஏனைய வீரர்­களால் கற்­பனை செய்­வ­து­கூட கடி­ன­மான ஒரு சாத­னை­யாக நீண்­ட­காலம் நிலைத்­தி­ருக்கும்.

சச்சின் போன்று விளங்க வேண்டும் என்­பது சிறு­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, அவரின் சம­கா­லத்து வீரர்கள்  பல­ருக்கு­கூட ஒரு கன­வாகும். பல்­வேறு சாத­னை­களைப் படைத்த சச்சின் நடுத்­தரக் குடும்­பத்தில் பிறந்து வளர்ந்­தவர்.
- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=2663#sthash.5BWsQ4fa.dpuf
இந்­திய கிரிக்கெட் அணியின் துடுப்­பாட்ட மேதை­யான சச்சின் டெண்­டுல்கர் அடுத்த மாதத்­துடன் டெஸ்ட் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்­வு­  பெ­ற­வுள்ளார்.

நவம்பர் 14 முதல் 18 ஆம் திக­தி­வரை மும்­பையில் நடை­பெ­ற­வுள்ள மேற்­கிந்­திய அணி­யு­ட­னான இரண்­டா­வது டெஸ்ட் போட்டி சச்­சினின் கடைசி டெஸ்ட் போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது.

 1989 ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்டி மூலம் டெஸ்ட் உல­குக்கு அறி­மு­க­மா­னவர் சச்சின் டெண்­டுல்கர். அதன்பின் கடந்த 24 ஆண்­டு­களில் ஏரா­ள­மான சாத­னை­களை அவர் படைத்தார்.

 தற்­போது 198 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டிய சச்சின் 200 ஆவது டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டு­வதும் ஏனைய வீரர்­களால் கற்­பனை செய்­வ­து­கூட கடி­ன­மான ஒரு சாத­னை­யாக நீண்­ட­காலம் நிலைத்­தி­ருக்கும்.

சச்சின் போன்று விளங்க வேண்டும் என்­பது சிறு­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, அவரின் சம­கா­லத்து வீரர்கள்  பல­ருக்கு­கூட ஒரு கன­வாகும். பல்­வேறு சாத­னை­களைப் படைத்த சச்சின் நடுத்­தரக் குடும்­பத்தில் பிறந்து வளர்ந்­தவர்.
- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=2663#sthash.5BWsQ4fa.dpuf

Post a Comment

0 Comments