மாணவர் தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு இன்று இனிதே நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
இந் நிகழ்வை பாடசாலையின் அதிபர் தலைமை தாங்கியதுடன் பிரதி அதிபர், பகுதித்தலைவர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
உயிரியல் மற்றும் பெளதிக விஞ்ஞானப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனுடன் பாடசாலை,பெற்றோர் கலந்துரையாடலும் நடந்து எதிர்கால திட்டங்கள் பற்றியும் பேசப்பட்டது.
எமது பாடசாலையின் விஞ்ஞான துறை வளர்ச்சிக்கு பூரண ஒத்துழைப்பைத் தரும் அதிபர் Musthafa Ansar அவர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments