தனது பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு பெண்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் ஜோதிடர் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சந்தேக நபர் தற்போது மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள பண மோசடி தொடர்பான வழக்கொன்றில் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை நீதிவான் கவனத்தில் கொண்டே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அம்பாந்தோட்டையைச் சேர்ந்த சந்தேக நபரையே நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
0 Comments