Subscribe Us

மே 7 ஆம் திகதி மீண்டும் பிரதமராகும் மஹிந்த ராஜபக்ச

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியேற்பது தொடர்பில் அவரின் ஆஸ்தான ஜோதிடரிடர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைத் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க எதிர்வரும் மே 7 ஆம் திகதியே பொருத்தமானது.

என்னதான் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டாலும் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை மகிந்த ராஜபக்ச இன்னும் கைவிடவில்லை.

பிரதமர் பதவியேற்பது தொடர்பில் மகிந்த தனது ஆஸ்தான ஜோதிடரிடம் அண்மையில் ஆலோசனை கேட்டுள்ளார்.

"எதிர்வரும் மே 7ஆம் திகதியே பொருத்தமானது. அன்றைய தினமே பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் அரசியலில் உங்களுக்குத் தொடர் வெற்றி கிட்டும்" என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments