Subscribe Us

header ads

யாழ் தையிட்டி விகாரையும் புலம்பெயர்க்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் காணிகளும் - இம்தாத் பசர் -

 


வெசக் தினத்தில் யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ச விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதாவது மக்களின் காணிகள் அதற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்காணிகளை விடுவிக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. அங்கு நீதி கிடைக்கனும் என்பது என் எதிர்பார்ப்பு. உண்மையில் அது விகாரைக்கு உரிய இடமா பொது மக்களின் காணிகளா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். அதனை விமர்சனங்களை தவிர்த்து சட்டத்திடம் விட்டுவிடுகிறேன். மக்களுக்கு நீதி கிடைக்கனும்னு பிரார்த்திக்கிறேன்.


எனக்கு மனதில் தோன்றிய சலனம் என்னவென்றால் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் மூன்று சதாப்தங்களாக வட மாகாண முஸ்லிம்கள் தங்களது வடபுல காணிகளை ஏக்கர் கணக்கில் இழந்து வாழ்கின்றனர் என்பது ரகசியவாதம் அல்ல. தம் பூர்வீக இடங்கள் கிட்டாகனியாக்கப் பட்டுவிட்டன. சிலரின் வயல் தோட்ட காணிகளின் எல்லைகள் அழிக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன. 

30 வருடங்களில் பல புதிய முதுமரங்கள் முளைத்தும் நடப்பட்டும் எல்லைகள் அடையாளம் இழக்கப்பட்டுள்ளன. Geological coordinates இல்லாத பழங்காலத்து காணி உறுதிகளை வைத்து அவர்களால் தம் காணிகளை மீளப்பெற முடியாமல் உள்ளனர். பல காணிகள் பிறரால் களவாடப்பட்டு பயிர்செய்கை நடக்கின்றது. உண்மையான காணி எல்லைகளை வழக்கு தொடுத்தாலே ஒழிய தெரிந்துகொள்ள முடியாது. 

இடம்பெயர்ந்து வாழும் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களால் செலவு செய்து இதனை செய்ய முடியாது. அதற்கான பண வசதி அவர்களிடமில்லை. அவர்களுக்காக வழக்காடுமன்றில் யார் வாதாடுவார்கள். தசாப்தங்கள் கடந்து இன்றும் பலர் துன்பம் நிறைந்த முகாம் வாழ்க்கை வாழ்கின்றனர் புத்தளத்தில். 

என்ன குடிசைகளில் பல குட்டிக்குட்டி கல் வீடுகளாக உருமாறியுள்ளன. அரசு முன்நின்று முறையாக காணி உரிமைகளை ஆய்ந்து உரியவர்களிடம் ஒப்படைத்தால் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலோங்கச் செய்யலாம். காணி உறுதிப்பத்திரங்களை வைத்து அளக்கும் போது தெரிந்துவிடும் பயிரோடு சேர்ந்து யார் யாருடைய காணியும் வளர்ந்துள்ளது என்பதை. மனிதக் கரையான் அரிக்காவிட்டால் Central repositoryஇல் இருக்கும் என நினைக்கிறேன் ஒவ்வொரு land registry இனதும் பிரதிகள். இவையெல்லாம் நன்நிர்வாகம் நல்லாட்சியின் நீட்சிகள். ஊர் மட்டத்தில் நாம் நீதியாக நடக்காமல் உயர் மட்டத்தில் அதை எதிர்பார்க்க முடியாது.

நீதி சமைக்கும் போது gloves போடக்கூடாது. வெருங்கையால் சமைக்கனும் அப்பதான் நீதி பதமாக சமையும். தன் பூமி பிறன் பிடிக்க கொதிக்கும் இரத்தம் பிறருக்கு அநீதியிழைக்கப்பட்டு சதாப்தங்களாக தொடரும் போதும் கொதிக்கனும். கூறுணர்வுள்ள சமூகத்தில் அறம் குறுத்தெலும்பு வரை ஊறிப்போயிருக்கும். அப்பொழுது தான் நீதி நிலைக்கும் எல்லோருக்கும் நீதி கிடைக்கும். அறம் நிலைக்கும். அல்லாது கோசங்களால் நாத்தழும்பேறினாலும் நீதியை எதிர்பார்க்கமுடியாது. வள்ளுவனும் அதை தான் பாடியுள்ளான்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற
- திருக்குறள் -

பொருள்:

1. ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை—மு. வரதராசன்

2. மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே —சாலமன் பாப்பையா

பொளிப்பு: புலிகள் அரக்கப் பறக்க விரட்டியடித்த வடபுல முஸ்லிம் மக்களின் காணிகளும் அவர்களிடம் மீள வழங்கப்படனும்.

- இம்தாத் பசர் -

Post a Comment

0 Comments