பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பேணுவதற்கான பரிமாற்றமாக இந்தப் பணம் பெறப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவாக பல சந்தர்ப்பங்களில் தொகையை செலுத்தும் தேதியை ஒத்திவைக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இருநூறு மில்லியன் டொலர் கடனை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உயரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
0 Comments