நாங்கள் செய்யும் இந்த சேவை நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையுள்ள சமூகத்தின் தேவை என்பது உங்கள் யாவருக்கும் தெறியும்.
இந்த வேளை திட்டத்தை ஆரம்பித்த காலம் தொட்டு இது வரைக்காலமும் நாங்கள் பல வித பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.
அதில் ஒன்றுலஞ்சம் வாங்கியுள்ளதாக பொய்குற்றச்சாற்று .உயிர் அச்சுறுத்தல் .தனிமை எங்களுக்கான பாதுகாப்பு இல்லை.
ஊரார் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தமது பிள்ளைகளின் நிகழ்காலத்தை தொலைத்து இரவு பகல் பாராது சில சமயம் விடியும்வேளை வரையும் போதை ஒழிப்பு செய்துள்ளோம்.
சுமார் 3 மாத காலதுக்குள் ஐஸ் மற்றும் தூள் போதை விற்பனையாளர்கள் 45 பேருக்கு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு சிறை அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்கள்.
இவர்களில் பலர் பலமுறை சிறை சென்றும் வந்துள்ளார்கள்.
இன்னும் சிலர் புதிதாக வியாபாரம் செய்தவர்கள். பாரியளவில் வியாபாரம் செய்கின்றவர்கள் சவாள்பன்னிக்கொண்டு ஐஸ்' தூள் போதை வியாபாரக் கடத்தலும் செய்து வருகின்றார்கள்.
இவர்களுக்கான தண்டனை பெற்று வழங்கிட முடியாத நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.
காரணம்.....!இவர்களோடு மோத வேண்டும் என்றால் எம்மிடம் பணப்பலம் அரசியல் அதிகாரம் போன்ற நம்பிக்கை வேண்டும். KAB எனும் அஞ்ஞா நெஞ்சன் இருந்த காலங்கள் எந்த அச்சமும் இன்றி துனிவுடன் பல சவாள்களை முறியடித்து செயல் பட்டு வந்துள்ளோம்.
ஆனால் இப்போது எந்த வகையிலும் நமக்கான பாதுகாப்பு தேவையாக இருக்கின்றது.
பணத்திமிறு கொண்ட போதையர்களின் சிந்தனைகள் திசைமாறி செயல்படுகின்ற காரணத்தினால் சமூகம் மீது அக்கரை உள்ள
ஊர் மக்கள் ஒன்று பட்டால் மாத்திரமே இந்த சமூக சீரழிவை எம் ஊரில் இருந்து இல்லாது செய்திட முடியும்.
பொது மக்களாகிய நீங்கள் முன்வரா விட்டாலும் பரவாயில்லை எங்களுக்கான ஆதரவையும் எங்கள் மனைவி பிள்ளைகளுக்கான துஆவையும் தந்தும் கேட்டு உதவுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
அத்தோடு நீங்கள் வசிக்கும் பிரதேசம் மற்றும் வீடுகளுக்கு பக்கத்தில் பாரியளவில் ஐஸ் போதை விற்பனையாளர்கள் யாரும் இருந்தால் எங்களுக்கு அறியத்தந்து சமூக மக்களை சீர்கேட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொலை பேசி எண் : 0703945743
0 Comments