இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது அங்கே போனையோ கேமரக்களையோ தூக்கிக்கொண்டு ஓடக்கூடாது.
இறந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்ய வேண்டுமே தவிர எப்படி அடக்கம் செய்கிறார்கள் என்பதை வீடீயோ பதிவு செய்து ஒளிபரப்பும் இடமல்ல அது.
அடக்கம் செய்யும்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் அதை மூடி மறைத்திருக்க வேண்டும்.
அதுவே இறந்தவார்களுக்கும் இறந்தவரின் குடும்பத்திற்கும் செய்யும் பேருதவி.
இவைகளை பார்க்கும் அவர்களின் குடும்பத்தினர்களின் மனது எவ்வளவு வேதனைப்படும் என்பதை சிந்திக்க வேண்டும்.
இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது வீடியோ எடுப்பது, விபத்து நடந்த இடத்தில் இரத்தம் சொட்டச்சொட்ட வீடியோ எடுத்து பரவ விடுவது, யாரையாவது கொடுரமாக தாக்குவதை வீடியோ எடுப்பது இவையெல்லாம் ஒரு வகையான மனநோய்.
இறந்தவர்கள் இடத்திவ் நாமோ,,நம் குடும்பத்தினரோ இருந்தால் இதை செய்வோமா? என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
காரணம் எடுக்கப்படும் வீடியோக்கள் ஏதோ ஒரு ரூபத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும்.
"உங்களுக்கு நீங்கள் எதை விரும்புவீர்களோ அதையே உங்கள் சகோதரனுக்கும் விரும்புங்கள்"-
இது இன்று புனானையில் (காத்தான்குடி வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்) நடந்த விபத்து நேரம் ஒவ்வொருவரும் இரத்தம் சொட்ட,சொட்ட குற்றுயிரும் குலையுயிருமாக இருக்க, ஒரு இளைஞன் தனது தொலைபேசியில் நடந்த விபத்தை படம் பிடித்துக்கொண்டிருக்கிறார்.!
அன்புச்சகோதரா,இதே நிலமை நாளை எனக்கோ,உனக்கோ,எங்களின் குடும்பத்திற்கோ இது வந்தால் அந்நேரம் இப்படி ஒருவர் அதனை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தால் இதனை பார்க்கும் நம்மாள் அதனை ஜீரணிக்க முடியுமா !?
இந்த பேஸ்புக் ல கிடைக்கும்,லைக், செயார் எதையும் எங்களுக்கு தரப் போவதுமில்லை. உங்களால் முடிந்த அளவு அவர்களுக்கு அந்நேரம் உதவிடுங்கள். அல்லது அவர்களுக்காக ஒரு ஓரம் நின்று பிராத்தியுங்கள். அதுவே அவர்களுக்கு அந்நேரம் செய்யும் மாபெரும் பேருதவி !
உண்மையிலேயே இந்த புகைப்படத்தை பாக்கும் கோவம்,கலந்த கவலையே வருகிறது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தைகள்.
0 Comments