அதுவும் ஏதோ பாழடைந்த, இடிந்த வீடு எல்லாம் கிடையாது. நல்ல நிலையில் இருக்கும் வீடுகள் தான். நல்ல சுற்றுப்புறத்தில், நகரங்களில் இருப்பவை
அதாவது ஒவ்வொரு ஏழாவது வீட்டுக்கும் ஒரு வீடு சும்மா ஆள் இல்லாமல் இருக்கிறது. அவற்றை வாங்கவேண்டுமெனில் அந்த ஊர் நகராட்சியிடம் போய் பத்திரபதிவு கட்டணம், எதாவது பாக்கி இருக்கும் வரிகளை கட்டிவிட்டு சொந்தமாக்கி கொள்ளலாம். சில வீடுகளுக்கு ஓனர் "ஏதோ முடிஞ்சதை கொடுங்க" என்பார். நீங்களும் ஒரு சின்ன தொகையை சம்பிரதாயத்துக்கு கொடுக்கலாம். சிலர் சும்மாவே கொடுத்துவிடுவார்கள்.
இம்மாதிரி காலி வீடுகளை அகியா என அழைக்கிறார்கள்.
2018ல் முகுஷிமா எனும் குட்டி தீவுக்கு ஒரு தப்பி ஓடிய கைதி நீந்தி வந்தான். பெரிய போலிஸ்படை அவனை துரத்திக்கொன்டு வந்தது. 20,000 பேர் மட்டுமே இருக்கும் அந்த தீவில் 1000 காலிவீடுகள் இருந்தன. கைதி ஏதோ ஒரு வீட்டில் போய் பதுங்கிக்கொண்டான்.
ஆயிரம் வீட்டையும் சோதனை இடவேண்டும். ஆனால் சட்டப்படி எதாவது வீட்டுக்குள் போலிஸ் நுழையவேண்டுமெனில் ஒவ்வொரு வீட்டுக்கும் சர்ச் வாரன்ட் வாங்கவேண்டும். 15,000 பேர் கொண்ட போலிஸ், வக்கீல் படை அந்த தீவில் இறக்கபட்டு, ஆயிரம் காலி வீடுகள் ஒவ்வொன்றுக்கும் தனியாக சர்ச் வாரண்ட் விண்ணப்பம் தயார் செய்து கோர்ட்டில் ஆயிரம் மனுக்களை தாக்கல் செய்து வக்கீல் வைத்து வாதாடி சர்ச் வாரண்ட் வாங்கி, ஆயிரம் வீடுகளை ரெய்டு செய்து திருடனை பிடித்தார்கள்.
ஆனால் 80 லட்சம் வீடுகள் காலியாக இருக்கும் ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வீடுகள் கூடுதலாக கட்டபட்டு விற்கப்படுகின்றன. ஜப்பானை விட மும்மடங்கு அதிக மக்கள் தொகை இருக்கும் அமெரிக்காவிலேயே சென்ற ஆண்டு 16 லட்சம் வீடுகள் தான் கட்டபடட்ன என்றால் பார்த்துக்கலாம்.
மயக்கம் எல்லாம் போட்டு விழுந்தாச்சா? தண்ணி குடிச்சு ஆசுவாசம் பண்ணிக்குங்க
இத்தனை காலிவீடுகளை வைத்துக்கொண்டு எதுக்கு இப்படி பேய்வேகத்தில் புதுவீடுகளை கட்டுகிறார்கள்?
காரணம் ஜப்பானில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள். வீடு கட்டி 30 ஆண்டுகள் ஆனது என்றால் 30 வது ஆண்டில் புதியதாக ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். 30 ஆன்டுக்கு மேல் பழைய வீட்டை வாங்க எந்த வங்கியும் கடன்கொடுக்காது. அதன் மதிப்பு பூஜ்ஜியமாகிவிடும்.
இதற்கு பலகாரணங்கள். ஜப்பானில் நில நடுக்கம் அதிகம். அதனால் புதியதாக கட்டபட்ட வீடுகள் நிலநடுக்கத்தை தாங்கும் என ஒரு நம்பிக்கை. 30 ஆண்டுகளுக்கு முன்பே வேறு எதோ ஊரில் வேலை கிடைத்து ஊர் மாறிபோனாலும் வீட்டின் மதிப்பு பூஜ்ஜியமாகிவிடும். செகண்ட்ஹான்ட் வீடுகளை வாங்க யாரும் முன்வரமாட்டார்கள். போன இடத்தில் புதுவீடு வாங்கிக்கொள்ளவேண்டியதுதான்
நம்ம ஊரில் வீடு எல்லாம் சொத்து மாதிரி. நாட்கள் செல்ல, செல்ல மதிப்பு ஏறும். ஜப்பானில் வீடு கார் மாதிரி. நாட்கள் செல்ல, செல்ல மதிப்புகுறையும்
அதனால் இலவச வீடு வேணும்னா ஜப்பான் கிளம்பறேன்னு எல்லாம் சொல்லகூடாது. அங்கே வீடு இலவசம். ஆனால் விசாவும், வேலையும் வாங்கறது வேற லெவல் கஸ்டம்
இதனால் எல்லாம் தான் #geography_is_destiny
~ நியாண்டர் செல்வன்
0 Comments