உலகிலேயே அதிக அளவில் பாலைவன நிலப்பரப்பை கொண்டுள்ள நாடு சீனா. நாட்டின் 27% நிலப்பரப்பு பாலைவனம் தான்.
பாலைவன நிலத்தை வீணடிக்க முடியாது. அங்கே விவசாயம் செய்தால் விளைநிலம் பெருகும். பாலைவனம் பசுமையாகி வனவளம் செழிக்கும். வேளாண் உற்பத்தி, வேலைகள் பெருகும்
ரைட்டு..ஆனால் பாலைவனத்தில் எப்படி விவசாயம் செய்வது? அங்கே மணலில் எதுவும் முளைக்காதே?
பாலைவனத்தில் மீனா என கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் மீனை வளர்க்க தான் நிலம் எதுவும் தேவையில்லை. மேலும் எந்த பயிரை விளைவித்தாலும் நேர் தொடர்ந்து தேவைப்பட்டுக்கொன்டே இருக்கும். மீன் வளர்க்க நீர் எதுவும் வீணாகாது. அதே நீரை ரிசைக்கிள் செய்து, சுத்திகரித்து ஆக்சிஜனை செலுத்தி பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம்.
சரி..பாலைவனத்துக்கு நீரை எப்படி கொண்டுவருவது?
வடசீனாவில் குளிர் நிரம்பிய பகுதியில் ஏராளமான பனிப்பாறைகள் கடலில் மிதக்கும். இதை கிளேசியர் என்பார்கள். இந்த பனிப்பாறைகளை உருக்கி, குழாய் வழியே பாலைவனத்துக்கு கொன்டுவந்தால் தீர்ந்தது பிரச்சனை. மீனை வளர்த்த நீரை ரீசைக்கிள் செய்து, கடைசியாக பயன்படுத்தவே முடியாது என ஆனபின் அதை பாலைவன மணலில் ஊற்றி சிட்டுநீர் பாசனம் மூலம் பாலைவனத்தில் வளரும் மரங்களை வளர்க்கலாம்...
கேட்க ஏதோ மாயாஜாலம் மாதிரி இருக்கு அல்லவா? பனிப்பாறைகளை உருக்கி, பாலைவனத்துக்கு கொன்டுவந்து, மீன் வளர்த்து, மீதமாகும் நீரில் மரம் வளர்ப்பது என்பது...
ஆனால் இதை சாதித்து பாலைவனத்தில் 600 டன் டிரவுட் மீன்களை விளைவிக்கவும் செய்கிறது சீனா
இதனால் தான் #geography_is_destiny
~ நியான்டர் செல்வன்
0 Comments