இலங்கையர்கள் அனைவரிடமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது.
இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் உங்களைத் தள்ளும்
நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான்
கேட்டுக்கொள்கிறேன்.
நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments