Subscribe Us

header ads

ரணில் கூறுகிறார் மக்களின் எழுச்சி அராபிய வசந்தம் போல இருகின்றதாம்

 இலங்கையில் தற்போது காணப்படும் மக்கள் எழுச்சி அராபிய வசந்தம் போல உள்ளது நான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னர் ஒருபோதும் நான்  பார்த்ததில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


டைம்ஸ்  ஒவ் இந்தியாவிற்கு வழங்கிய  நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னர் ஒருபோதும் பார்த்ததில்லை,நான் கலவரங்களை மோதல்களை மறியல் போராட்டங்களை பார்த்திருக்கின்றேன், இது முற்றிலும் வித்தியாசமானது, இது பணவீக்கத்திற்கு எதிரான மக்களின் சீற்றம் வெடிப்பு.

போதியளவு மின்சாரம் இன்மை, சமையல் எரிவாயு இன்மை பெட்ரோல் தட்டுப்பாடு போன்றவற்றிற்கு எதிரான மக்கள் சீற்றமிது.

முழு அமைப்பு முறையும் சிதைவடைகின்றது, மக்களால் இனிமேலும் காத்திருக்க முடியவில்லை. நீங்கள் 13- 15 மணிநேர மின்வெட்டை எதிர்நோக்கும்போது குறிப்பாக இரவில், இது மிகவும் கடினம். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினர் இல்லை, மத்திய தர வர்க்கத்தினர் வாழும் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன (அங்கேயே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின) இரு பிரிவினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்,.

அருகில் உள்ள சந்தியில் மெழுகுதிரி போராட்டமாக ஆரம்பமானது பின்னர் அவர்கள் மிரிஹானயில் பெங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் வீட்டிற்கு பேரணியாக செல்ல தீர்மானித்தனர்.

 அரசியல் கட்சிகளை விட இந்த விடயத்தை பொதுமக்கள் கையில் எடுத்துள்ளதே முக்கியமானது. அவர்கள் அரசியல் கட்சிகளை ஒரு புறம் வைத்துள்ளனர். இது அராபிய வசந்தம் போன்ற மக்கள் இயக்கம் போல காணப்படுகின்றது.

யார் காரணம் என விவாதிப்பதில் அர்த்தமில்லை, ஒவ்வொருவரும் ஏனையவர்களை நோக்கி விரல்களை நீட்டுவார்கள் நாங்கள் தற்போதைய நெருக்கடியை ஆராய்ந்து அதற்கு தீர்வை காணமுயல்வோம். நெருக்கடி என்ன, அதற்கான தீர்வுகள் என்ன இதனை எவ்வாறு தீர்ப்பது? துரதிஸ்டவசமாக பிரச்சினைகளை தீர்க்கும் பழக்கம் இலங்கையர்களிடம் இல்லை, ஆனால் அதற்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள். இது பலனளிக்கப்போவதில்லை,நாங்கள் பாரதூரமான நெருக்கடியின் மத்தியில் இருக்கின்றோம்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆரம்ப கட்ட ஆய்வை பாருங்கள் அது வரிகள் குறைக்கப்பட்டமை உரங்கள் இல்லாதது குறித்து சுட்டிக்காட்டுகின்றது ஆகவே யார் இதற்கு பொறுப்பு. ஆகவே அந்த குழுவினர் நெருக்கடிக்கான காரணங்களை முன்வைத்துள்ளனர்.

தற்போது நாங்கள் அதனை எவ்வாறு எதிர்கொள்வது எங்கள் அமைப்பு முறையில் தொடர்ந்து காணப்படும் பிரச்சினைகளே இதற்கு காரணம் என தெரிவிப்பதை இலங்கையர்களாகிய நாங்கள் நிறுத்தவேண்டும்.

சர்வதேச நாணயநிதியம் விடயங்களை அடையாளம் கண்டுள்ளது அது எப்படி உருவானது என்பதை விட்டுவிடுங்கள் நிலைமையை எப்படி ஸ்திரப்படுத்துவது பொருளாதாரத்தை எப்படி முன்னோக்கி நகர்த்துவது என பார்ப்போம், செலுத்தவேண்டிய கடன் மற்றும் தொடர்ந்தும் தாங்க முடியாத கடன்களே இந்த நிலைக்கு காரணம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

 பெருந்தொற்று 2019 நவம்பரில் ஆரம்பமாகிவிட்டது.  இந்த அரசாங்கம் வரிகளை குறைத்த அதே மாதத்தில், இதன் காரணமாகவே எங்களால் வரவுசெலவுதிட்ட இலக்குகளை அடையமுடியவில்லை. கோவிட் அனைவரையும் பாதித்தது ஆனால் பல நாடுகள் அதிலிருந்து மீண்டு விட்டன, ஆகவே நீங்கள்  கோவிட்டின் பின்னால் ஒளிந்துகொள்ள முடியாது.

இலங்கையிடம் மோசமான அந்நிய செலாவணி பற்றாக்குறை காணப்படுகின்றது இவை அனைத்தும் உக்ரைன் பிரச்சினைக்கு முன்னாலும் காணப்பட்டன, உக்ரைன் மோதல் ஆரம்பமான பின்னர் எரிபொருள் விலை அதிகரித்தது ஆனால் இந்த நெருக்கடிகள் நீண்டகாலமாக காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.  

Post a Comment

0 Comments