Subscribe Us

header ads

Al-Aqsa பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது (Photos)

 


பழைய மாணவர்கள் சங்கத்தினரால் அண்மையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களிடம் முன் வைக்கப்பட்ட வேலை திட்டங்களில் மூன்று வேலை திட்டங்கள் நேற்று பாராளுமன்ற உறுப்பினரால் நிறைவேற்றப்பட்டது.

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் ரோஸ் புகாரி அவர்களின் தலைமையில் பாடசாலை நிர்வாக குழு,பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பெண்கள் பகுதி பிரதான நுழைவாயிலில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் மர்ஹூம் தம்பி நெய்னா மரிக்கார் புதிய மாடிக் கட்டிட ஜன்னல்களுக்கு பாதுகாப்பு( இருப்பிலான) நெட் அமைத்தல்,மாணவர்களுக்கு புத்தகப்பை(Bags) வழங்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன,

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்,கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர்களான ஜனாப் ஜவ்சி,ஆசிரியர் அஸ்லம், பிரதேச சபை உறுப்பினர் ரஸ்மினா பாஹிம் ,கல்பிட்டி SLLP அமைப்பாளரும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினருமான M.H.M.நாசர் ,முன்னால் பிரதேச சபை உறுப்பினர் அக்மல்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளம் மஹீன்,பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் முந்திர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

நேற்றைய நிகழ்வு சிறப்பாக அமைய சேவையாற்றிய பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் பாடசாலை கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோர்களுக்கு பாடசாலை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை எதிர் வரும் காலங்களில் புதிய பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்டும் என்பதையும் எதிர் பார்ககலாம்.

-Rizvi hussain-


















Post a Comment

0 Comments