முதல் முதலாக தரம் ஒன்றிலிருந்து தரம் இரண்டிக்கு வகுப்பேற்றப்படும் மாணவர்களை மகிழ்விப்பது மாத்திரமல்லாமல் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கும் முகமாக கல்பிட்டி வன்னி முந்தல் மீனவர் சங்கத்தின் நிதி உதவியுடன் அதிபர் ரோஸ் புகாரி ,பழைய மாணவர் சங்கம்,பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தற்போதைய தரம் ஒன்று அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பாடசாலை உபகரங்கள் வழங்கப்பட்டதோடு மற்றும் அதிபர் பகுதி தலைவர் தரம் ஒன்று ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் ,பிரதி அதிபர்கள்,பகுதி தலைவர் ,தரம் ஒன்று ஆசிரியர்கள்,வன்னி முந்தல் மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இன்ஷா அல்லாஹ் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கும் முகமாக இத்திட்டத்தை வருடா வருடம் தொடர்ந்து நடாத்துவதற்கு தாம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இறைவன் துணை செய்ய வேண்டும் என்றும் வன்னி முந்தல் மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்,
-Rizvi Hussain-
0 Comments