இந்த அரசை கொண்டு வர பங்களித்தவர்கள் என்பதில் நாம் இன்னமும் கவலை கொள்ளவில்லை, சந்தோசப்படுகிறோம்.
ஜனாதிபதி தேர்தலின் போது நான் பகிரங்கமாக சொன்ன வசனம்,"நல்லாட்சியை விட கோட்டாவின் ஆட்சி முஸ்லிம்களுக்கு சிறந்ததாக இருக்கும்."முஸ்லிம்களுக்கு என்பதை ஹைலைட் பண்ணவும்.
அந்த ரணில், சஜித், மைத்டிரி நாய் ஆட்சிக்கு ஓட்டுப்போட்டவனெல்லாம் இறுதி வரை கவலைப்படாமல், அதெற்கெதிராக கிளம்பாமல் இருந்ததை நாம் மறக்க முடியுமா? இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை, அபாயாவுடன், தொப்பியுடன் எங்கும் போகலாம்.
உயிர் இருந்தால் பொருளாதார பிரச்சினையிலும் கஞ்சை கூளை குடித்து வாழலாம்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாவிட்டால் பொருளாதார வசதி இருந்தும் பிரயோசனமில்லை.
நாய் ஆட்சியில் காட்டுக்குள் குமர் குட்டிகளுடன் ஒழித்திருந்தது மறந்து விட்டதா? அரச ctb பஸ்களில் கூட அபாயா போட்ட பெண் ஏறக்கூடாது என்ற பயங்கரம் மறந்து விட்டதா?
இத்தனை பொருளாதார பிரச்சினைக்கு மத்தியிலும் தமிழ் கூட்டமைப்பினர் ஜனாதிபதியை கண்டு தம் பிரச்சினையை பேசி வெல்வது நம் கண்களுக்கு தெரியவில்லையா?
பொருளாதார பிரச்சினையை வைத்து தமிழ் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் செய்கிறதா?
நாம் மட்டும் ஏன் பீக்கு முந்தின கொசுவாய் அரசை ஏச வேண்டும்?
அரசோடு யுத்தம் செய்த தமிழ் மக்கள் அரசுடன் இணக்கமாக போகும் போது முஸ்லிம்கள் மட்டும் ஏன் முட்டாள்த்தனமாக சிந்திக்க வேண்டும்?
பொருளாதார பிரச்சினை என்பதெல்லாம் நிரந்தரமானதல்ல.
முஸ்லிம்களின் வாக்குகளை மது, மாது, பணம், பதவிக்கு விற்ற முஸ்லிம் கட்சித்தலைவர்களால் சமூகம் காட்டிக்கொடுக்கப்படுகிறது.
இந்த ஆட்சி இன்னமும் முஸ்லிம்களுக்கு சிறந்த ஆட்சிதான்.
இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு மட்டும் என ஆபத்து வந்தால் முதலில் எதிர்ப்பதும் நானாகத்தான் இருக்கும்.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
ஸ்ரீலங்கா உலமா கட்சி.
0 Comments