Subscribe Us

header ads

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் முடிவு


 உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது.

இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா அங்கீகரித்தது. அங்கு படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால் ரஷ்யா தனது படைகளை அப்பகுதியில் நிலைநிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ரஷ்யா படையெடுப்பின் அச்சுறுத்தலால் உக்ரைனில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்வதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக ரஷ்ய அதிபர் புட்டின் இன்று அறிவித்தார்.

உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் நடவடிக்கையில் தலையிடுபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.    

Post a Comment

0 Comments