கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழையமாணவரும் 1991 ஆண்டு தொடக்கம் 2002 ஆண்டு வரை அல் அக்ஸா தேசிய பாடசாலையில் சித்திர ஆசிரியராக சேவையாற்றியவரும் புத்தளம் கல்வி வலயத்தில் சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகரும் பல ஆசிரியர்களை உருவாக்கிய பேரபிமானத்துக்குரிய எம் கலை ஆசானுமாகிய DR. M.M. MOHAMMED அவர்கள் தேசிய கல்வி நிறுவனத்தின் (அழகியல் கல்வி) முதலாவது தமிழ் மொழி சிரேஷ்ட விரிவுரையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கலாநிதி ஆசிரியர் முஹமட் அவர்கள் 1990ஆம் ஆண்டு மாம்புரி பாடசாலையில் சித்திர பாட ஆசிரியராக நியமனம் பெற்று கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை பாத்திமா பாடசாலை போன்ற பாடசாலைகளில் ஆசிராக கடமையாற்றியதுடன் பல ஆசியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர், இவர் சிறந்த விளையாட்டு வீரரும் , மாணவராக இருக்கும் போது முன்னால் ஜனாதிபதி பிரமதாசாவிடம் இரண்டு முறை ஜனாதிபதி விருது பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் கலாநிதி ஆசிரியர் முஹமட் அவர்களுக்கு கல்பிட்டி மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments