Subscribe Us

header ads

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக கற்பிட்டியில் மரங்கள் நாட்டப்பட்டது

 


தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக 04.02.2021 தினம் கற்பிட்டியின் சில பகுதியில் மரங்கள் நாட்டப்பட்டது.

NAFSO Sri Lanka
- தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் கற்பிட்டி மற்றும் புத்தள மாவட்ட இணைப்பாளர் சகோதரர் பத்மநாதன் அவர்களின் தலைமையில் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கற்பிட்டி பிரதேச மற்றும் புத்தளம் மாவட்ட
NAFSO Puttalam Youth TM
- அமைப்பின் இணைய இணைப்பாளரான M.A.M. Asfak மற்றும் இளைஞர் அணியின் சக உறுப்பினர்களும் சிறுவர்களும் மகளிர் சகோதரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் இந்த பாதையை ஒரு குளிர்ந்த நிறைந்த மரங்கள் காணப்படுகின்றன ஒரு பகுதியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஒற்றுமையாக இணைந்து இந்த மரம் நடுகை முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பின் இணைப்பாளர் சகோதரர் பத்மநாதன் அவர்களும் மற்றும் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகளும் இந்த சந்தர்ப்பத்தில் தங்களது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

Post a Comment

0 Comments