30 வருட காலம் கிராம சேவகராக சிறப்பான முறையில் சேவையாற்றி வந்த கல்பிட்டி மண்டலக்குடாவை சேர்ந்த P.M.M.பைனஸ் G.S அவர்கள் நிர்வாக கிராம உத்தியோகத்தராக(AOGN) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் 1990 ஆண்டு கிராம சேவகராக பதவி ஏற்று முதல் பதவி காலத்தை முதலைப்பாளி கிராம சேவகர் பிரிவில் ஆரம்பித்தார்.அங்கு தொடர்ந்து 18 வருடங்கள் கடமையாற்றியது சிறப்பம்சமாகும் .
அதன் பின்னர் ஆனவாசல் கிராம சேவகர் பிரிவில் 7 வருடங்களும் அதை தொடர்ந்து தனது சொந்த கிராம சேவகர் பிரிவான மண்டலக்குடாவில் 5 வருடங்கள் கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம உத்தியோகத்தராக பதவியேற்று கடமையாற்றி வரும் பைனஸ் G.S.அவர்களுக்கு மென்மேலும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என ஊர் சார்பாகவும் பிரதேச மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
வாழ்த்துக்கள்
-Rizvi Hussain-
0 Comments