Subscribe Us

header ads

இன்றைய ஆளுமை நித்திலம் கல்பிட்டி அல்/அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் _ M. B. M. ரோஸ்

 


இன்றைய ஆளுமை நித்திலம் கல்பிட்டி அல்/அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் _ M. B. M. ரோஸ் அவர்கள்....

ஓயாத அலை போல வளம் பல தேயாத மலைபோல நல்உள்ளங்கள் வாழும் கல்பிட்டி மண்ணில் முஹமட் மிஸ்பா நூர்ஜெஸீமா ஆகியோரின் புதல்வியாக மெஹரம்ரோஸ் 1964ம் ஆண்டு பிறந்தார்.
இவருடைய தந்தை புத்/ நகர சபையின் இலிகிதராக பணிபுரிந்தவர். வீரகேசரி பத்திரிகையின் நிரூபர் மட்டுமல்ல புகழ்பெற்ற இஸ்லாமிய வானொலி ஹிந்திப்பாடகர். எனவேதான் தன்மகளுக்கு மெஹரப்ரோஸ் _மக்கத்துமாதுளம் பழம் என்ற ஹிந்தி நாமத்தைசூட்டி பேரானந்தம் அடைந்தார்.
இவர் கல் /அல்/அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் _1 தொடக்கம் A/L வரை கல்வி கற்றார் பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் சிறப்பு பட்டதாரியானார். தன்னை பெற்ற மண்ணுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தான் கற்றுத்தேர்ந்தபாடசாலையையே தேர்வு செய்து ஆசிரிய வாழ்வை ஆரம்பித்தார். பிரதி அதிபராக செயற்பட்ட இவர் தராதரம் பெற்ற முதல்தர அதிபராக பதவி உயர்வு பெற்றார்.
அல்/அக்ஸா தேசிய பாடசாலையின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை இன்றுவரை தக்கவைத்துள்ளார். இப்பெரும் பேர்வுவகை வரலாற்றில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கே உரித்தானது.
விடாமுயற்சியும் தளராத தன்னம்பிக்கையும் தன்னலம் கருதாத தூய பணியாய் மலர்ந்தமைக்கு அத்தாட்சியாக இவருடைய பிள்ளைகள் வைத்தியராக, பொருளியளாலராக (ஜப்பான்) இதைவிட வேறு நற்சான்றிதல் தேவையில்லை என நம்புகின்றேன்.
அதிபர் அவர்கள் துணிவையும் பணிவையும் இனிதே அணிகலனாக அணிந்து செயற்பட்டதால் சீனா தேசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான தொழில் வழிகாட்டால் மாநாட்டில் கலந்து சிறப்பித்தார்.
ஒரு பாடசாலையின் வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் அந்த பாடசாலையின் சிறந்த பெறுபேறுகளிலும் தேசிய கௌரவ விருதுகளில்தான் தங்கியுள்ளது. அந்த வகையில் அதிபர் அவர்கள் பொறுப்பேற்ற பிற்பாடு ஏற்பட்ட மாற்றங்கள்.
2016ம் ஆண்டு A/L அ. இ. ரீதியிலான தமிழ் மொழி மூலம் 2ஆம் இடம் 23 மாணவர்கள் பல்கலைக்கழக தெரிவு
2017 L. L. B தெரிவு 6 போர் 2018 -2019 A/L சிறந்த பெறுபேறு சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி விருது புத்தளமாவட்டத்தில் எந்தவொரு பாடசாலைக்கும் கிடைக்காத கௌரவம் நெறியாள்கை புத். மாவட்ட சு. மு. ஆலோசகர் ஜனாப் A. H. M. ஷாபி அவர்கள்.

சர்வதேச ஓசோன் தினத்தில் அகில இலங்கை ரீதியில் தேசிய ஜனாதிபதி விருது.

அ. இ. பாடசாலைகளுக்கிடையே திருகோணமலை கடற்படை சமுத்திரவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் குறுநாடகம் கௌரவ விருது.
மூதூர் முஹமட் புஹாரி அவர்களுடன் அதிபர் அவர்கள் இல்லர வாழ்வியலில் இனிதே வாழ்வாங்குவாழ வாழ்த்துகிறோம்.
இதய நிலா.....

Post a Comment

0 Comments