இலங்கையில் நிர்மாணிக்கப்பட உள்ள ஆசியாவில் மிகப் பெரிய இறைச்சி தொழிற்சாலைக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது அதிருப்தி மற்றும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
புத்த பகவான் வந்துச் சென்ற இலங்கையில் இப்படியானவற்றை செய்வது தவறு எனவும் தனது எதிர்ப்பை மீறி இறைச்சி தொழிற்சாலை திறக்கப்படுமாயின் முதலாவது விலங்குக்கு பதிலாக தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முன்வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மேர்வின் சில்வா இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் கட்டுநாயக்க பிரதேசத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இறைச்சி தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
0 Comments