Subscribe Us

header ads

முஸ்லிம் மக்களின் ஜனாசா விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் - அசாத் சாலி


முஸ்லிம்களின் மனங்களை காயப்படுத்த இலங்கை அரசாங்கம் கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதாகவும் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச தொலைக்காட்சி ஒன்றின் இணையத்தளத்தின் ஊடாக அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

தற்போதைய இலங்கை அரசாங்கம் சிறுபான்மை இனத்தவரை காயப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறி வருகிறது எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

    


Post a Comment

0 Comments