பலாத்காரமாக ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, இன்று புதன்கிழமை 23 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உள்ளிட்ட சிறுபான்மை கட்சித் தலைவர்களும், பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை என அறிய வருகிறது.
0 Comments