நான் நலம் உங்கள் நலத்திற்கு என்ன குறை
நிற்க..
உங்களது நாட்டில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்காக லைசன்ஸ் வழங்கும் நடைமுறையினை தைரியமாக ஆரம்பித்து வைத்தீர்கள். ஆனால் குவைத் காரன் உங்களை ஓவர்டேக் பண்ணிச் சென்று பெண் நீதிபதி ஒருவரையும் நியமித்துவிட்டாருக்கிறார். ஆனாலும் யார் தலையில் எலவு விடிஞ்சாலும் நமக்கு நல்லது நடக்கும் வரை சந்தோசம் தான்..
நீங்கள் பெண்களுக்கு லைசன் கொடுக்கும் வரை மார்க்கத்தின் அடிப்படையில் பெண்கள் லைசன் பெறத் தகுதியில்லாவர்கள் என்றே முழு உலகமும் நினைத்துக்கொண்டிருந்தது. எனவே அந்தக் காலப்பகுதியில் இலங்கையில் பெண் காதிமார்களை நியமக்கக்கூடாது இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம் என்ன அடிப்படையில் யாரோ ஒருவர் சொன்னதன் விளைவாக கல்யாண திருத்தச் சட்டம் மாத்திரம் அநாதையாபோச்சி.
இந்த நிலையில திருமண வயது 18 என்டு மாத்தப்போறோம் என்பதா நீதி அமைச்சர் கருத்தொன்ற வௌியிட்டிருக்காப்புல.. அப்ப காதலிக்குறதுக்கு வயசு நிர்ணயீங்களே பாக்கலாம் என்டு ஒரு சலபி அதுவும் ஜம்மியதுல் உலமாட பத்வா குழு உறுப்பினர் ஒருத்தர் ஒரப்பாவி கட்டுர எழுதியிருந்ததா ஞாபகம். அம்பது வயசுப் பொம்புல பொற பாக்க ஏலா.. கண்ணாடி போட்டீந்தா பொற பாத்தது ஒட்டில்ல.. என்டெல்லாம் சொல்லக் கொள்ள சத்தமில்லாம இருந்துட்டு இப்ப இப்புடி கட்டுரை எழுதறதப் பாத்தப் பிறகு ஆணந்தக் கண்ணீர் வடித்த ஆயிரம் பேர் இருந்ததா சொல்றாங்க..
ஆனா திருமனச் சட்டம் பத்தி இம்புட்டு பேசுற தாருமே ரெஜீஸ்டர் பொஸ்தகத்துல வார சீதனத் தொக எழுதுறத்துக்கு ஒதுக்கி ஈக்குற எடத்த இல்லாமாக்குறது பத்தி பேசவே இல்ல.. காதி பொம்பல ஒட்டில்லண்டும் 18 வயசு ஒட்டில்லண்டும்.. காதல் வயசயும் மாத்துங்க என்டும் தான் எல்லாரும் போராடினாங்க
எங்கட நாட்டின் ஆலிம்களாகட்டும் புத்திஜீவிகளாாகட்டும் எல்லாத்துட்டயும் ஒரு பரம்பரப் பழக்கம் இருக்குறத கடந்த கால சம்பவங்கள் மூலமா வௌங்க எடுக்க ஏழுமாச்சி.. ஒரு பிரச்சின சமூகத்துல ஆரம்பிக்ககொள்ள அதுபத்தி யாராச்சும் ஒருத்தர் ஆலிம்கள்ட்ட கொண்டு போய்ட்டாங்கள்ண்டா.. அந்த அப்பாவியப் புடிச்சி.. டேய் நீ ஏன்டா தடுமாறுற.. பாமரன் என்டா பாமரன் மாதிரி ஈக்கோணும்.. ஆலிம்களுக்கு ஒஸ்தாராவ வரப்படாய்.. உனக்கு எதுக்கு தேவயில்லாத வேல..அதுக்குத் தான் நாங்க இருக்கோமலியா.. நாங்க நேரத்துக்கு எல்லாத்தயும் பாத்து செய்வோம்.. உலமாவ கன்னியப்படுத்தப்பழகுங்கடா.. எல்லாத்துக்கும் மொதல்ல மருவதியாப் பேசப் பழகிக்கோ.. என்றெல்லாம் சிறந்த முறையில் உபதேசம் கூறி அனுப்பிவிடுவார்கள்.
அடுத்து புததிஜீவிகள் என்று ஒரு குரூப் இருப்பாய்ங்க. அவிங்க ஒரு கூட்டத்து குறைஞ்சது பத்து வட்சப் குரூப்புண்டு ஆரப்பிச்சிட்டு கருத்தா சொல்லிட்டு இருப்பாங்க.. ஆயிர வருசம் வரலாறு.. சேர் ராசிக் பரீத் இதச் செஞ்சார்.. டீ.பீ ஜாயா இதச் செஞ்சார் நாம எதச் செஞ்சோம் என்டு அவிங்கள அவிங்களே செருப்பால அடிச்சுக்குவாங்க.. காலப் போக்குல அந்த குரூப் எதுக்கு ஆரம்பிச்ச என்டு ஆரம்பிச்சவனுக்கே மறந்து போயிருக்கும்.. ஐடியா வேணும்டா தாறோம் அதுக்கு மேல ஒன்டும் ஏலா என்டு இருக்கும் இவங்கட எக்சன்.
ஏதோ நாம மட்டும் தான் பொதுமக்கள் நலன் கருதி நாப்பது வயதுப் பெண் வாயின் ஊடாக வயித்தில் புகுந்த நல்ல பாம்பு.. வீடியோ இணைப்பு ஆதாரம் என்டு நமக்கிட்ட வார நாலுபேத்துக்கு நல்லது நடக்குற வுிசயங்கள சமூவத்துக்கு செயார்பண்ணி நாப்பது நல்லதுகளச் செஞ்சிகொண்டிருக்குறோம்..
எனவே உங்கள் துஆவில் எங்களைம் சேர்த்துக்கொள்வீராக..
மற்றவை நேரில்
கலாநிதி பங்காளி.. (அமேரிக்கா பிரிடிஷ் அபிரிக்கா யுனிவர்சிட்டி)
0 Comments